Thursday, 14 August 2014

அனடாமிக் தெரபி(செவி வழி தொடு சிகிச்சை)

Anatomic Therapy என்றால் என்ன?

நாம் அனைவரின் உடலிலும் ஒரு சுரப்பி இருக்கிறது. அது சுரக்கும் ஒரு திரவம் மனிதனின் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். இந்த திரவம் 120 வயது வரை சுரக்கும்.

அந்த சுரப்பியின் பெயர் என்ன? உடலில் எங்கே உள்ளது? அது சுரக்கும் திரவத்தின் பெயர் என்ன? அதை எப்படி நமக்கு நாமே சுலபமாக சுரக்க வைப்பது என்பதை படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவருக்கும் தெரியும்படி பல மொழிகளில் விளக்கமாக நான்கு மணி நேரத்தில் புரிய வைத்து கற்றுகொடுக்கிறார் டாக்டர் Healer பாஸ்கர்.

48 மணி நேரத்தில் இந்த சுரப்பியை சுரக்க வைக்க முடியும். அனைத்து நோய்களும் 120 நாள் முதல் 360 நாளுக்குள் முற்றிலும் குணமாகும்.

இந்த சிகிச்சையில் எந்த மருந்து, மாத்திரை, ஊசி, தியானம், யோகா, மூச்சுபயிற்சி, உடற்பயிற்சி, அக்குபஞ்சர், ரெய்க்கி, நாடிபார்த்தல், பத்தியம் கிடையாது.

இவ்வாறு நமது உடலில் உள்ள ஒரு சுரப்பியை நாமே சுரக்க வைத்து நமது நோய்களை நமக்கு நாமே குணப்படுத்தி கொள்ளும் முறைக்கு அனடாமிக் தெரபி, செவிவலி தொடு சிகிச்சை என்று பெயர்.

இந்த சிகிச்சைக்கு 4 மணி நேரம் செலவு செய்தால் போதும்.

உப்பு, புளி, காரம், குறைக்க தேவையில்லை, பத்தியமும் இல்லை, வாக்கிங் தேவை இல்லை.

சக்கரை மற்றும் அனைத்து நோயாளிகளும் சிகிச்சை முடிந்த அடுத்த வினாடி முதல் எல்லா இனிப்புகள், பழங்கள், எண்ணெய் பலகாரங்கள், மனதுக்கு பிடித்த எல்லா உணவுகளையும் வாழ்க்கை முழுவதும் தாராளாமாக சாப்பிடலாம்.

ஒரே ஒரு முறை சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும் இரண்டாவது முறை சிகிச்சை எடுக்க அவசியம் இல்லை.

இந்த சிகிச்சை எந்த மதமும் சம்பந்தப்பட்டது அல்ல. எனவே எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.

வழி - 1 # 9944221007, 9842452508 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் ஊரில் இலவச சிகிச்சை நடக்கும் நாள் மற்றும் இடத்தை தெரிந்து கொண்டு நேரில் வரலாம்.

வழி - 2 # நேரில் வரமுடியாத நோயாளிகளும் மருத்துவ துறையில் உள்ளவர்களும் DVD -ஐ VPP அஞ்சல் மூலம் பெற்று உங்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெறலாம்.

வழி - 3 # 500- பேர் ஒன்று சேர்ந்து அழைத்தால் உங்கள் இடத்திற்கே வந்து இலவச சிகிச்சை அளிக்கப்படும் (வீடு, ஆசிரமம், அப்பார்ட்மெண்ட், கல்லுரி, பள்ளி, முதியோர் இல்லம், அலுவலகம்).

வழி- 4 # முழு சிகிச்சை முறையை http://www.anatomictherapy.org/ என்ற இணைய தளத்தில் இலவசமாக பார்த்து கொள்ளுங்கள்.

வாழை நார் ஆடைகள்


undefined
பொதுவாக பருத்தி, பட்டு, பாலியஸ்டர் போன்றவற்றைக் கொண்டுதான் ஆடைகள் தயாரிப்பது நமக்குத் தெரியும். ஆனால், வாழை நாரி லிருந்து துணிகளை தயாரித்து வருவது பலருக்கும் தெரியாது.


சென்னை பல்லாவரத்துக்கு அடுத்த அனகாபுத்தூரில் வாழை நாரை வைத்து ஆடை நெய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது ஒரு நிறுவனம். ஆசியாவிலேயே இங்குதான் வாழை நார், மூங்கில், கற்றாழை என இயற்கை பொருட்களைக் கொண்டு ஆடைகள் தயாரிக்கப்படுவது எக்ஸ்ட்ரா ஆச்சரியத் தகவல்.
வாழை நாரிலிருந்து ஆடைகள் தயாரிக்கும் சேகரை சந்தித்தோம். ''ஆரம்பத்தில் எல்லாரையும் போலவே நாங்கள் பருத்தி, பட்டு போன்றவற்றைக் கொண்டு ஆடைகள் தயாரித்து வந்தோம். கடந்த 2006-ம் ஆண்டுதான் முதன் முதலாக வாழை நாரை வைத்து ஆடை செய்ய முயற்சி செய்தோம். அது நன்றாகவே வந்தது. இதை பயன்படுத்திய பலரும் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். அது எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இயற்கைக்கு உகந்த, நம் உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத இந்த வாழை நார் ஆடை தயாரிக்க ஆகும் செலவு மிக மிகக் குறைவு'' என்ற சேகர் தொடர்ந்து பேசினார்.
undefined''பருத்தி நூல் ஆடைகளைப் போன்றதுதான் வாழை நாரிலிருந்து தயார் செய்யப்படும் ஆடைகளும். பொதுவாக, பருத்தி நூல் நீளமாக வரும். ஆனால், வாழை நாரிலிருந்து எடுக்கப்படும் நூல் நீளமாக இருக்காது. பல வாழை நார் நூல்களை ஒன்றாக இணைத்துதான் ஆடைகளைத் தயாரிக்க முடியும்.
இப்படி வாழை நூல் பயன்படுத்தி ஆடைகள் தயாரிப்பதால் இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. தவிர, பருத்தி ஆடைகளைப் போல இந்த ஆடைகளையும் நன்கு சாயமேற்ற முடியும். இதனால் நாம் விரும்பிய வண்ணத்தில் சேலை, சட்டை துணி போன்றவற்றை உருவாக்கலாம். பருத்தி நூலைவிட குறைந்த செலவே இதற்கு ஆவதால், இது குறைந்த விலையிலும் கிடைக்கிறது'' என்றார்.
இந்த வாழை நார் ஆடை களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறதா என்று கேட்டோம். ''தமிழகம், குஜராத் பகுதிகளில் இந்த புடவைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அங்குள்ள பெரிய கடைகள் இதற்கான ஆர்டர்களை தந்து வாங்கிச் செல்கிறார்கள். தவிர, வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் மட்டும் மாதத்திற்கு பத்தாயிரம் ஆடைகள் வேண்டுமென எங்களிடம் கேட்கிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய ஆர்டரை சப்ளை செய்கிற அளவுக்கு எங்களிடம் இடவசதி இல்லை.
undefined
தவிர, பருத்தி நூல் போல இதனை எளிதில் தயாரித்துவிடவும் முடியாது. ஒவ்வொரு இழையாகப் பிரித்து, காய வைத்து, அதை நீளமான நூலாக மாற்றி, நெய்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும். நீளமான நூலை உருவாக்கும் டெக்னாலஜி மட்டும் வந்து விட்டால், இன்னும் வேகமாக இந்த ஆடைகளை தயாரிக்க முடியும்'' என்றவர், இந்த தொழில்நுட்பத்துக்கான பேடன்ட் உரிமையையும் வாங்கி வைத்திருக்கிறார். டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி.-யில் சான்றிதழ் வாங்கி இருக்கிறார்.
undefined
''எங்களுக்கு போதிய இடவசதியை அரசாங்கம் ஏற்படுத்தித் தந்தால், இன்னும் அதிக அளவில் இந்த ஆடை களை உற்பத்தி செய்து உலகம் பூராவும் ஏற்றுமதி செய்வோம்'' என்று கோரிக்கை வைத்தவர், தேங்காய் நார், மூங்கில், கடல் புல் போன்ற 25 வகையான இயற்கை பொருட்களைக் கொண்டு ஆடைகளை தயாரித்து, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார்.
''அடுத்து, மூலிகைகளைக் கொண்டு புடவை தயாரிக்கும் எண்ணத்திலும் இருக்கிறோம். வாழை நார் மூலம் புடவைகள் மட்டுமல்லாமல் சுடிதார், சர்ட்டு கள் தயாரிக்கும் வேலையிலும் கூடிய விரைவில் இறங்கப் போகிறோம்'' என்றார் சேகர்.
இயற்கைக்கு உகந்ததாக இருக்கும் இத்தொழில் வருங் காலத்திற்கு ஏற்றது என்பதில் சந்தேகமே வேண்டாம்.

சாம்பிராணி எப்படி உருவாகிறது?

undefined
பண்டைய காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவ பயன்பாட்டிற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது . சாம்பிராணி எதில் இருந்து பெறப்படுகிறது  என்று என்றாவது  நீங்கள் யோசித்தது  உண்டா ?

மாவீரன் மகா அலெக்ஸான்டர் சிறு வயதில் தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டில் இடம் கல்வி பயின்று கொண்டு இருக்கும் போது தன்னுடைய ஆசிரியருக்கு சாம்பிராணி தேவைப்பட்டதை உணர்ந்தார் பின்பு மாவீரனாக உலகை வெல்ல ஆரம்பித்த நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் படையெடுப்பின் போது மூட்டை மூட்டையாக சாம்பிராணியை தன்னுடைய  ஆசிரியர் அரிஸ்ட்டாட்டிலுக்கு அனுப்பி வைத்தார்.

சாம்பிராணி ஆனது பாஸ்வெல்லியா செர்ராட்ட(Boswellia serrata)எனப்படும் தாவரகுடும்பத்தை சேர்ந்த  ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் ஆகும் இது மிக மெதுவாக கடினமாகி ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுடைய சாம்பிராணி ஆக மாறுகிறது. இவையை எரித்தால் மிகுந்த மணத்தை பரப்பும்
ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத்,அஸ்ஸாம்,ராஜஸ்தான்,பீகார், ஒரிஸா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக காணப்படுகிறது .தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் 500 மீ – 700 மீ உயரத்தில் காணப்படுகிறது மரமானது உறுதியானது ஆனால் எளிதில் அறுக்கவும் , இழைக்கவும் முடியும் இவ்வகை மரங்கள் தீக்குச்சிகள் தயாரிக்க பெரிதும் பயன்படுகின்றன . நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் பால் அதிகமாக வடியும் ஒரு மரத்திலிருந்து ஆண்டு ஒன்றிற்க்கு 1 கி.கி வரையில் சாம்பிராணி பெற முடியும்

சாம்பிராணி மருத்துவ பயன்கள்

ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) மரத்திலிருந்து கோந்தும் பெறப்படுகிறது இவையும் சாம்பிராணி போலத்தான் கோந்தை நீருடன் சேர்த்து பெண்டோஸ் சர்கரைகள் தயாரிக்கப்படுகிறது இது இருமல், காமாலை, நாள்பட்டபுண்கள், சொறி, சிரங்கு ,படர்தாமரை போன்றவற்றிற்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

சாம்பிராணியை ஆவியாக்கி போஸ்வெல்யா எண்ணை , டர்பெண்டைன் எண்ணை போல எண்ணை எடுக்கிறார்கள்  இதிலிருந்து வார்னிஷ் தயாரிக்கப்படுகிறது . சாம்பிராணி எண்ணை ஆனது சோப்பு தயாரித்தலிலும் பயன்படுகிறது

Wednesday, 13 August 2014

பூண்டின் மகத்துவம்

1. மூலிகையின் பெயர் -: பூண்டு.
2. வேறு பெயர்கள் -: வெள்ளைப்பூண்டு.
3. தாவரப்பெயர் -: ALLIUM SATIVUM.
4. தாவரக்குடும்பம் -: AMARYLLIDACEAE.
5. பயன் தரும் பாகங்கள்- வெங்காயம் போன்று பூமிக்கடியில் இருக்கும் கிழங்கு மட்டும்.
6. .வளரியல்பு -: வெள்ளை வெங்காயம் பூண்டு எனப்படும். வெள்ளைப் பூண்டு என்றே பலரும் கூறுவர். இதை நடுவதற்கு நாற்று அல்லது பூண்டுப்பல் பார்களில் நட்டுத் தண்ணீர் விட்டு வளர்ப்பார்கள். இதை புரட்டாசி மாதத்தில் நட்டு வளர்த்து பார்களிலிருந்து வளர்ந்த பின் தை மாதத்தில் வெட்டியெடுப்பார்கள். இதன் தாயகம் ஆசியாக்கண்டமாகும். அதன் பின் தான் மேலை நாடுகளுக்குச் சென்றது. இது எரிப்பும் காரமும் உடையது. முகர்ந்தால் நெடியுடையது. பண்டை காலம் தொட்டே மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது. பூண்டிலிருந்து அல்லி சாடின் என்ற மருந்தைத் தயாரிக்கிரார்கள். நாட்டுவைத்தியத்தில் பூண்டிலிருந்து மாத்திரைகள், லேகியங்கள், தைலம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.
7. மருத்துவப் பயன்கள் -: பூண்டு நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறு துணையாகிறது. புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உடவுகிறது. வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. ஊளைச் சதையைக் கரைக்கும். தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நீரழிவைக் குணப்படுத்தவும் உதவுகிறது. மாதவிடாய்க் கோளாறுக்கும் மருந்தாகும்.
பூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்த அழுத்தம், மாரடைப்பு வராது. இரத்தக் குழாயில் கொழுப்புப் படியாது.
பூண்டைப் பாலில் காய்ச்சியும், ஊறுகாயகவும், லேகியமாகவும் செய்து தொடர்ந்து சாப்பிட்டால் ஊளைச் சதை குறையும். உடல் எடையும் குறையும்.
பூண்டை நசுக்கிய சாற்றுடன் கற்பூரத்தை கரைத்துப் பூச மூட்டு வலி குணமாகும். பூண்டு 50 கிராம், மிளகு 50 கிராம், ஓமம் 20 கிராம், சுக்கு 20 கிராம், எருக்கிலை சாறு 100 மி.லி. ஆமணக்கு நெய் ஒரு லிட்டர் சேர்த்துக் காய்ச்சி வடிக்கவும். இதனை மூட்டு வலி, வீக்கம், வாதம், நரம்பு வலிக்கும் பூசலாம்.
கட்டிகள் கரைய பூண்டை அரைத்துப் பற்றிட வேணடும்.
பூண்டைப் பாலாவியில் வேக வைத்துக் கடைந்து கொள்ள வேண்டும். பனங்கருப்பட்டியும் தேனும், சுக்குத் தூளும் போட்டு இளகலாகச் செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் அளவு சாபிபிட வேண்டும். வயிற்று வலி, வாய்வுக் கோளாறு யாவும் குணமாகும்.
பூண்டை வதக்கி வற்றல் கழம்பு வைத்துச் சாப்பிட குளிர் தொல்லை நீங்கும்.
இதன் சாற்றை காதில் சில துளிகள் விட காது வலி குணமாகும்.
எந்த ரூபத்தில் பூண்டை உண்டாலும் கபத்தை வெளியேற்றும், மலத்தை இளக்கும்.
பூண்டுச் சாற்றில், சிறிது உப்பு கலந்து உடம்பில் எங்கேனும் சுளுக்கு எற்பட்ட இடத்தில் பூசினால் சுளுக்கு மறையும்.
பூண்டுரசம் கபத்தை நீக்கும்.
குப்பபைமேனி இலையுடன் பூண்டை வைத்து அரைத்துச் சாறு எடுத்து, இச்சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியே வந்திடும்.
பூண்டு வசம்பு, ஓமம், இவைகளை சம அளவு எடுத்து இடித்து மூன்று நாட்கள் சாப்பிட மாந்த ஜன்னி குறையும்.
பூண்டை நசுக்கி, சாறெடுத்து சாறை உள் நாக்கில் தடவ உள் நாக்கு வளர்ச்சி குறையும்.
பூண்டோடு சிறிது எலுமிச்சை சாறு விட்டு அரைத்து இரு வேளை சாப்பிடக் கீல்வாதம் குணமாகும்.
பூண்டையும், சிறிது உப்பையும் சேர்த்துத் தின்றால்—தீடீரென ஏற்படும் வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், நெஞ்சுக் கரிப்பு குறையும்.
வெள்ளைப் பூண்டு, வெற்றிலை இரண்டையும் அரைத்து தேமல் மீது பூசினால் மறைந்து விடும். அது போல் தொடை இடுக்கிலுள்ள கக்கூஸ் படை மீது தடவி வர அதுவும் குணமாகிவிடும்.
பூண்டை அரைத்துக் கரைத்து வீட்டின் முன் பகுதி, பின் பகுதிகளில் தெளித்திட்டால் நல்ல பாம்பு வராது.
பூண்டை வெல்லம் கலந்து சாப்பிட்டால் உடல் வலி மறையும்.
பூண்டுடன் சிறிது ஓமத்தை நசுக்கிப்போட்டு கசாயம் வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க குழந்தைகளின் வாந்தி, கொட்டாவி குறையும்.
வெற்றிலைக் காம்பு, வசம்பு, திப்பிலி, பூண்டு இவைகளைச் சம அளவு எடுத்து வெந்நீரில் அரைத்து உள்ளுக்குக் கொடுக்க—குழந்தைகளின் மாந்தம் குறையும், சளித் தொல்லையும் குறையும்.
வெள்ளைப் பூண்டு, வசம்பு, ஊமத்தை வேர் இவைகளைச் சம அளவு எடுத்து, நன்கு அரைத்து, நல்லெண்ணையில் கலந்து, காய்ச்சி நன்கு சிவந்து வரும்போது இறக்கி விடவும். இந்த எண்ணெயை ஆறாத புண்கள் காயத்தின் மீது பூசினால் ஆறிவிடும்.
பூண்டுத் தைலத்தை உடலில் தேய்த்து வர சருமத்தில் ஏற்படும் நமச்சில், அரிப்பு மறையும்.
பூண்டைப் பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சேர்த்துச் சாப்பிட மூலநோய் நீங்கும்.
ஒரு வெள்ளைப் பூண்டு, ஏழு மிளகு, ஒன்பது மிளகாய் இலை—இவைகளைச் சேர்த்து அரைத்து காலை, மாலை சாப்பிட்டால் குளிர் காச்சல் போய்விடும்.
பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட நெஞ்சுக் குத்து நீங்கும்.
பூண்டைப் பொடி செய்து தேனில் குழைத்து தலை, புருவத்தில்—பூச்சிவெட்டு முடிவளராமல் இருக்குமிடத்தில் தேய்த்து வர முடி வளரும்.
பூண்டைப் பச்சையாகச் சாப்பிட்டால் வாத நோய் குணமாகும்.
அரைக்கீரையோடு பூண்டு, சீரகம், பச்சை மிளகாய்ச் சேர்த்து புளி சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட வாயுத் தொல்லை நீங்கும்.
பச்சைப் பூண்டை உண்பதால் உடல் பலம் பெறும். உற்சாகம் ஏற்படும். அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலி மறையும், புளிப்பால் உண்டாகும் எரிச்சல் நீங்கும். இரத்த அழுத்தம் குறையும்.
பூண்டு, மிளகு, கரிசலாங்கண்ணிக் கீரை மூன்றையும் அரைத்துக் காலையில் மட்டும் மூன்று நாட்கள் நெல்லிக்காய் அளவு சாப்பிட சோகை நோய் குணமாகும்.
பூண்டை நசுக்கி சுண்ணாம்பு நீரில் நனைத்துக் கட்ட நகச்சுற்றி குறையும்.
பூண்டையும், துத்தி இலையையும் சேர்த்து லேசாக நசுக்கி நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி எண்ணெயை உடலில் தடவி வர உடல் வலி குறையும்.
காய்ச்சிய பாலில் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டைப் போட்டுப் பருக நன்கு தூக்கம் வரும். இரத்தக் கொதிப்பு அடங்கும்.
பூண்டு, மிளகு, துத்தி இலைகளை ஒவ்வொன்றும் 50 கிராம் வீதம் எடுத்து, இத்தோடு 15 கிராம் வசம்பு சேர்த்து நன்றாக அரைத்துப் பெண்கள் சூதக காலத்தில் சாப்பிட சூதக வலி வராது.
பூண்டை நெய்யில் வறுத்து, உணவு உண்ணும் போது சாதத்தில் சேர்த்து 40 நாட்கள் சாப்பிட வாய்வுத் தொல்லை மறையும்.
பூண்டுச்சாற்றை டி.பி. நோயாளிகள் பருகி வந்தால் டி.பி. குறையும்.

Tuesday, 12 August 2014

மாடித்தோட்டம்

எங்களுக்கும் வயல்வெளிகளில் உழைக்கத்தான் ஆசை. ஆனால், எங்கே உழைப்பது என்றுதான் தெரியவில்லை’ நிலமற்றவர்களின் இந்தக் குரல், சிற்றிதழ் ஒன்றில் பதிவாகி இருந்தது. இதேபோல… ‘எங்களுக்கும் விவசாயம் செய்ய ஆசைதான்… ஆனால், எங்கே போய் விதைப்பது?’ என்கிற ஆதங்கம், விவசாய ஆர்வமுள்ள நகர்ப்புறவாசிகளிடம் நிறையவே இருக்கிறது. இவர் களுக்கெல்லாம் வழிகாட்டுவது போல… வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், சமையலறைத் தோட்டம் என்று பலரும் காய்கறி உற்பத்தியில் கலக்கிக் கொண்டுள்ளனர்!

ஈரோடு, திண்டல், காரப்பாறை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், மாடித்தோட்டத்தில் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கிறார். அம்மா சரஸ்வதி, மனைவி கல்பனா சகிதம் மாடித்தோட்டப் பராமரிப்பிலிருந்தவரைச் சந்தித்தபோது… தகுந்த இடைவெளியில் வரிசையாக அணிவகுத்து நின்ற தொட்டிச் செடிகளை வருடியபடியே பேசினார்.
”எனக்குச் சொந்த ஊர் சத்தியமங்கலம். படிச்சு முடிச்சு அமெரிக்காவுல ஐ.டி. கம்பெனியில வேலை பார்த்தேன். பிறகு, ஈரோடு வந்து இந்த இடத்துல வீடு கட்டி குடியிருக்கேன். கம்ப்யூட்டர் சம்பந்தமான பயிற்சி நிறுவனத்தை வீட்டுலயே நடத் திட்டுருக்கேன். ரெண்டு வருஷமா மாடியில தோட்டம் அமைச்சு காய்கறி, கீரை, மூலிகைனு வளர்த்துட்டிருக்கேன்.
ஆரம்பத்துல எட்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற மார்க்கெட்டுக்கு போய்தான் காய்களை வாங்கிட்டு வருவோம். சில நேரத்துல நாம விரும்புற காய்களைவிட, கிடைக்கற காய்களைத்தான் வாங்க வேண்டி யிருக்கும். விலையும் கட்டுப்படியா இருக்காது. இந்த சமயத்துலதான், மாடித்தோட்ட ஆசை வந்துச்சு. தங்கைகளோட வீட்டுல மாடித்தோட்டம் போட்டிருக்காங்க. அதை யெல்லாம் பாத்துட்டு வந்து, இயற்கை முறையில வீட்டுத்தோட்டம் அமைச் சுட்டோம்” என்று முன்னுரை கொடுத்த சிவக்குமார், தோட்ட அமைப்பு முறைகளை விளக்கினார்.
”மொத்தம் 1,500 சதுர அடியில தோட்டம் இருக்கு. 600 சதுர அடி பரப்புல நிழல் வலைப் பந்தல் போட்டிருக்கோம். மாடித் தோட்டம் அமைக்கறதுக்கு முதல்கட்டமா, காலி டப்பா, டின்கள், பழைய பக்கெட்டுக்கள், கிரீஸ் டப்பாக்கள், மண்தொட்டிகள்னு பயன்பாடு முடிஞ்ச பொருட்களா சேகரிச் சோம். 150 சட்டி செம்மண், 30 மூட்டை தேங்காய் மஞ்சி ரெண்டையும் சரிசமமா கலந்து, தண்ணீர் தெளிச்சு கலக்கி, நிழல்ல காய வெச்சு… அதுல நாலு சட்டி, ஒரு கிலோ சாணம், அரை கிலோ ஆட்டு எரு, கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு கலந்து, தொட்டிகள்ல நிரப்பி செடிகளை நட்டு வெச்சோம்” என்று தொழில்நுட்பங்களோடு சொன்னார்.
தரை சேதமாவதில்லை!
மகனைத் தொடர்ந்த சரஸ்வதி, ”சிறுசு, நடுத்தரம், பெருசுனு 350 தொட்டிகள்ல செடிகளை வளர்க்கிறோம். மொட்டை மாடியில மழைநீர்ச் சேமிப்புத் தொட்டியும் அமைச்சுருக்கோம். அதுல சேகரமாகற தண்ணி, வீட்டுக் கழிவு நீர் ரெண்டையும்தான் செடிகளுக்கு ஊத்து றோம். வீட்டுக்கு வாங்கற லாரி தண்ணியையும் ஊத்துவோம். நீளமான மரப்பலகைய வெச்சு, அது மேல தொட்டிகளை வெக்கறதால, தரை ஈரமாகி சேதாரம் ஆகற தில்லை. ஒவ்வொரு செடியோட வளர்ச்சியைப் பொறுத்து, தொட்டிகளோட உயரத்தை அமைச்சுக் கணும். காலையில ஒரு மணி நேரம் சாயங் காலம் ரெண்டு மணி நேரம் மாடித் தோட்டத்துல குடும்பத்தோட வேலை பார்க்கிறோம். சாயங்காலம் எங்க வீட்டுக் குட்டிகளும் தோட்ட வேலையை ஆர்வமா செய்றாங்க. முழுக்க இயற்கை இடுபொருட் களையே பயன்படுத்துறோம்.
களைகள் முளைச்சா, அப்பப்போ எடுத்துடுவோம். கொடிப்பயிர்கள் படர்றதுக் காக ரீப்பர் குச்சிகளை தொட்டிக்குள்ள பதிச்சுருக்கோம். அறுவடை முடிஞ்ச தொட் டில செடிகளைப் பிடுங்கி அப்புறப்படுத்திட்டு, தொட்டி மண்ணை சுத்தமான தரையில் கொட்டி வெயில்ல காய விடுவோம். தொட்டியையும் சுத்தமாக கழுவி உலர வெச்சுட்டு, காய வெச்ச மண்ணை நிரப்பி, ஒரு கிலோ மண்புழு உரம், ஒரு கிலோ எரு, ஒரு கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு எல்லாத்தையும் போட்டு புதுசா செடிகளை நடுவோம். இங்க, மூலிகைச் செடிக அதிகமா இருக்கறதால, பூச்சிகள் வர்றதில்லை. அதையும் மீறி வர்ற பூச்சிகளை, நீம் மருந்து அடிச்சு விரட்டிடுவோம்’’ என்றார்.
இங்க இல்லாததே இல்லீங்க..!
மாமியாரைத் தொடர்ந்த கல்பனா, ”தக்காளி, கத்திரி, முள்ளங்கி, பீட்ரூட், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், மிளகாய், வெண்டை, பொரியல்தட்டை, ‘கோழி’ அவரை, கொத்தவரை, ‘பெல்ட்’ அவரை, பீர்க்கன், பாகல், மிதிப்பாகல், சுரைக்காய், அகத்தி, புளிச்சக்கீரை, வல்லாரை, தவசி முருங்கை, மணத்தக்காளி, தூதுவளை, சிறுகீரை, தண்டுக்கீரை, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை,  இஞ்சி, பூண்டுனு வகை வகையா காய்களை நட்டு வெச்சுருக் கோம். அப்புறம்… அக்ரகாரம், அப்பக்கோவை, ஆடாதொடா, இன்சுலின் (சர்க்கரைக் கொல்லிச் செடி), கற்பூரவல்லி, கானாவாழை, சிறியாநங்கை, சிறுகுறிஞ்சான், சீந்தல், பிரண்டை, திருநீற்றுப்பச்சிலை, துளசி, தொட்டால்சிணுங்கி, நித்யகல்யாணி, வெற்றிலை, நொச்சி, மென்தால், முசுமுசுக்கை, லெமன் கிராஸ், ஆகாச கருடன், சோற்றுக்கற்றாழைனு மூலிகைகள்; அரளி, ரோஜா, முல்லை, மல்லிகை, செண்டுமல்லி, நந்தியாவட்டை, இட்லிப்பூனு பூச்செடிகள்; பூவாழை, தேன்வாழை மரங்களும் மாடியில இருக்கு. தனியா அசோலாவையும் வளர்க்குறோம்’ என்று பட்டியல் போட்டுக் கொண்டே போக, அசந்து நின்றோம்.
ஆண்டுக்கு  15 ஆயிரம் லாபம்!
நிறைவாகப் பேசிய சிவக்குமார், ”எங்க குடும்பத்துல 5 பேர். எங்களுக்கான காய்கறி தேவையில 70% இந்த மாடியிலேயே கிடைச்சுடுது. அந்த வகையில வருஷத்துக்கு காய்கறிக்காக செலவழிக்கிற 15 ஆயிரம் ரூபாய் எங்களுக்கு மிச்சம். காஸ்மோபாலிடன் சிட்டி, வெளிநாடுனு நல்லா வாழ்ந்தாலும், பரம்பரைத் தொழிலான விவசாயத்தை விட்டுட்டோமேங்கிற வருத்தம் முன்ன இருந்துச்சு. இப்போ அது போயேபோச்சு” என்றார், மகிழ்ச்சியுடன்.
நன்றி விகடன்

பெட்ரோல் பங்க் ஏமாற்று வேலை


முதலாவதாக பெட்ரோல் பங்க்கில் செய்யும் ஏமாற்று வேலை கலப்படம். இது சாதாரண பைக் மற்றும் கார் ஓட்டும் நம்மால் அவ்வளவு எளிதில் கண்டு பிடிக்க முடியாது. சொந்த ஆட்டோ வைத்து ஓட்டுவோர் இதனை எளிதில் சொல்வார்கள். இத்தகைய கலப்பட பங்குகளை தவிர்க்க மிக சாதாரண வழி, கூட்டம் அதிகம் இல்லாத பெட்ரோல் பங்குகளை அறவே தவிர்த்து விடுங்கள் ! அந்த பெட்ரோல் பங்குகள் செய்யும் கலப்படம் குறித்து சுற்று வட்டத்தில் உள்ளோர் நன்கு அறிந்தே தான் அதனை முழுதும் தவிர்க்கின்றனர் என்பதை உணருங்கள் !

மாறாக நாம் என்ன நினைக்கிறோம்? பெட்ரோல் பங்க்கில் போய் ஐந்து நிமிடம் காக்க நமக்கு மனமே வருவதில்லை. விரைவில் போட்டால் போதும் என கூட்டம் இல்லாத பெட்ரோல் பாங்குகளை நாடுகிறோம். இந்த எண்ணத்தையும், வழக்கத்தையும் முழுதும் தவிர்க்க வேண்டும்.

அடுத்து மிக முக்கியமாக பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பும் ஆட்கள் செய்யும் திருட்டு ஒன்று உண்டு. நமக்கு முன் ஒருவர் நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டிருக்கிறார் என வைத்து கொள்ளுங்கள் அடுத்து நமக்கு இருநூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட வேண்டுமெனில், மறுபடி சீரோ செய்யாமல் அந்த நூறிலிருந்தே ஓட்டி விடுவார்கள். ஆக உங்களுக்கு இருநூறு ரூபாய்க்கு பதில் நூறு ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோல் போடப்படும் ! நீங்கள் இதை கவனிக்கா வண்ணம் அந்த நேரம் தான் சரியே இன்னொரு நபர் வந்து உங்களிடம் பணம் வாங்குவார். அல்லது பெட்ரோல் நிரப்பும் நபரே உங்களிடம் வேறு பேச்சு கொடுப்பார். இதை ஒரு வேளை நீங்கள் கவனித்து விட்டு கேட்டால், சீரோவுக்கு மாற்ற மறந்து போன மாதிரி ஆக்டிங் குடுத்து விட்டு பின் முழுதும் போடுவார்கள். நீங்கள் பெட்ரோல் போடும் முன் சீரோவை சரி பார்ப்பது மிக அவசியம்.

மேலே சொன்னது கூட எச்சரிக்கை உணர்வு அதிகம் இல்லாதோருக்கு தான் நடக்கும். அதை விட என்ன தான் எச்சரிக்கையுடன் இருந்தாலும் நம்மிடம் அவர்கள் பெட்ரோல் அடிப்பார்கள். இதை கவனிக்கும் நமக்கு செம டென்ஷன் ஆகும்.

நீங்கள் இருநூறு ரூபாய்க்கு பெட்ரோல் போடுகிறீர்கள் எனில், துவக்கம் சீரோவில் இருந்தாலும் அடுத்த ஜம்பே இருபது அல்லது முப்பது ரூபாயில் ஆரம்பிக்கும். அளவில் பார்த்தால் சீரோவில் இருந்து நேரே 0.20 அல்லது 0.30 லிட்டருக்கு ஓடி விடும். அதன் பின் அடுத்தடுத்த எண் மாறினாலும், இந்த முதல் ஜம்ப் இருக்கே அங்கு தான் அவர்கள் கொள்ளை லாபம் அடிப்பார்கள் ! " என்னங்க எடுத்த உடன் 0 .30 லிருந்து ஓடுது என்று கேட்டால் " மெஷின் செம பாஸ்ட். அப்படி தான் ஓடும் " என்று சொல்லி நம்மை அனுப்புவதிலேயே குறியாய் இருப்பார்கள். என் நண்பர் ஒருவர் இத்தகைய இடங்களில் செமையாக சண்டை போட்டு விடுவார். இவர் போடும் சத்தம் தாங்க முடியாமல் இவருக்கு ஜம்ப் ஆனாதக சொல்லும் 0.30 லிட்டர் பெட்ரோல் மீண்டும் போட்டு அனுப்பி விடுவார்கள். காரணம் அங்கு நிற்கும் கஸ்டமர்கள், இவர் சொல்லும் குற்ற சாட்டுகளை கேட்டால் மறுபடி இங்கு வர மாட்டார்கள் என்பதே !

ஆனால் நம்மை போன்ற ஆட்கள் ஒவ்வொரு முறையும் இவர்களிடம் இப்படி சண்டை போட்டு நம் ரத்த அழுத்தத்தை உயர்த்தி கொள்ள முடியாது ! இதற்கு ஒரே வழி. வரிசையில் நிற்கும் போதே மற்றவர்களுக்கு எப்படி போடுகிறார்கள் என பார்க்க வேண்டும். எல்லோருக்கும் இப்படி ஜம்ப் ஆகிற மாதிரி தான் போடுகிறார்கள் எனில் நம் முறை வரும் போது " மெதுவா போடுங்க. ஜம்ப் ஆக கூடாது" என தெளிவாக அவரிடம் கூறுங்கள். " இவர் ஜாக்கிரதையான ஆள். ஜம்ப் ஆனால் சத்தம் போடுவார்" என ஒழுங்கே போட வாய்ப்பு உண்டு. அப்படி சொல்லும் நேரம் பெரும்பாலும் அதிகம் ஜம்ப் ஆகாமல் அவர்கள் பெட்ரோல் போடுவதை என் அனுபவத்தில் பார்த்துள்ளேன்

இப்படி ஜம்ப் ஆவது துவக்கத்தில் மட்டும் தான் இருக்குமா கடைசியில் வெறும் மீட்டர் ஓட, பெட்ரோல் உள்ளே கொட்டாமல் இருக்குமா என தெரியவில்லை. போலவே ஜம்ப் ஆவது பெட்ரோல் போடுபவர் கையில் தான் கண்ட்ரோல் உள்ளதா அல்லது பெட்ரோல் பங்குகள் எல்லா கஸ்டமருக்கும் இப்படி ஜம்ப் ஆகுற மாதிரி ஏற்கனவே செட்செய்திருப்பார்களா என்றும் தெரிய வில்லை. இது பற்றி யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்கள் !

இவர்கள் செய்யும் இன்னொரு அக்கிரமம். பெட்ரோலுக்கு பெட்ரோல் போடும் முன்பே பணம் வாங்கி விடுவார்கள். போட்ட பிறகு மறுபடி கேட்பார்கள். நாம் கொடுத்து விட்டோம் என சொன்னால் நம்ப மாட்டார்கள். எனக்கு இது மாதிரி இரண்டு முறை ஆகியிருக்கிறது. இன்னும் சிலருக்கும் இப்படி ஆவதை பார்த்துள்ளேன்.

இதற்கு ஒரே வழி பெட்ரோல் போட்ட பின் தான் பணம் தரவேண்டும். அவசரமாய் முடிக்க வேண்டும் என முதலில் தந்தால், ஞாபக மறதியிலோ, அல்லது வேண்டுமென்றோ அவர்கள் மீண்டும் கேட்க வாய்ப்பு உண்டு !

இப்படி பெட்ரோல் பங்குகள் நம்மை செம டென்ஷன் ஆக்குவதை தவிர்க்க, மோசமான பெட்ரோல் பங்குகளை முழுதும் தவிர்த்தல் நலம் ! பிரச்சனை இல்லாத, நல்ல குவாலிட்டி மற்றும் சரியான அளவுடன் பெட்ரோல் தரும் பாங்குகள் குறைவே.

அத்தகைய பங்குகள் எவை என உங்களுக்கு தெரிந்தால், அவை சற்று தூரம் என்றாலும் கூட சிரமம் பார்க்காமல் அவற்றிலேயே பெட்ரோல்
போடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள் ! இன்றைக்கு பெட்ரோல் விற்கிற விலையில் ஏமாறாமல் இருப்பதுடன், அவற்றை கவனித்து பீ.பி ஏறாமல் இருக்கும் !

Monday, 11 August 2014

கொடூர நோய்களை பரப்பும் பி.டி மஞ்சள் வாழைப்பழம்

கொடூர நோய்களை பரப்பும் பி.டி மஞ்சள் வாழைப்பழம் – ஓர் அதிர்ச்சி தகவலும் ! நல்ல வாழைப்பழத்தின் ஒரு இனிப்பான தகவலும்

கொடூர நோய்களை பரப்பும் பி.டி மஞ்சள் வாழைப்பழம் ஓர் அதிர்ச்சி தகவலும் ! நல்ல வாழைப்பழத்தின் ஒரு இனிப்பான தகவலும்.....

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத் தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.
காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உட லில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்க ளை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.

இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப் பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூர வள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப் பழங்கள் மணமாகவும், நல்ல ருசி யாகவும் இருக்கும்.
இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவு ம், மற்ற உணவை செரிமானமாக்க வும் பயன்படும். மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடு வார்கள்.

பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படு ம். இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம்.

பூச்சிக்கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல் லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெ ரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.இதைத் தான் நாம் பி. டி.வாழை என்று அழைக்கிறோம். கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை.

ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா. இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரி ட செய்தார்.

நோய்களை பரப்பும்:

உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வ தேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களி ன் துணையுடன் கள்ளத் தனமாக இவ் வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப் பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.

இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழை ப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகி றது. முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலை யத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது. மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது.

மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என் ற ஆசை வார்த்தை கூறி வியாபாரி கள் இந்த மரபணுமாற்று கேவின் டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட் டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது. மதுரை, சேலம், கோவை, நெல் லை போன்ற நகரங்களில் இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்குபோதிய வரவேற்பு இல்லை. இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது.
இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை. எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற் கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவன ங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன. இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.
பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனும தி வழங்கவில்லை. பி.டி.ரக மரப ணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒருமுறை மட்டும் காய் த்து கனியாகும்.

செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய் கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட் டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோ டு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறு நீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும்.

இந்நிலையில் இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதி யும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழை ப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது.

எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?

பெங்களூர் வாழைப்பழம் என்று விற்பனை செய்யப்படும் மரபணு மாற்று பி.டி. ரக மஞ்சள் வாழைப்பழம் காட்டு கொட்டை வாழை யில், மீன் சோளம், காட்டுமொச்சை இவற்றின் மரபணுவை புகுத்தி கண்டு பிடிக்கப்ப ட்டதாகும்.
இயற்கையான வாழை ரகங்கள் வாழையடி வாழையாக வாழை மரத்தின் கிழங்கிலிருந்து செடி வளரும். அதனை பிரித்து நட்டா லே புதிய வாழையை பயிர் செய்ய முடியும். ஆனால் பி.டி. ரக கேவின்டிஷ் வாழை ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண் ணம் மரபணுவில் மாற்றம் செய்யப் பட்டு செயற்கையாக மலடாக்கப்பட்ட தாகும். எனவே விவசாயிகள் தாமாக வே மறுதடவை பயிர் செய்ய முடியா து.

திசுவளர்ப்பு முறையில் செடி வாழை சர்வதேச கம்பெனிகளின் ஏஜெண்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயிரிட வழங் கப்படுகிறது. இவ்வகை பி.டி. ரக மரபணு மாற்று வாழையை தொடர்ந்து தோட்டத்தில் பயிர் செய்தால் அந்த நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழு, பூச்சிகள், பாக்டீரியாக்கள் மொத் தமாக அழிக்கப்பட்டு அந்த நிலம் எந்த பயிரும் வைக்க முடியாத வண்ணம் பாலைவனமாக மாறிவிடும் என்கிறார் டாக்டர் திருத்தணிகாசலம்.

இதுவரை வாழைப்பழ ரகத்தில் உள்ள அதிர்ச்சியான கெடுதல்களை பார்த்தோம் இனி நல்ல செய்தியினையும் பார்ப்போம்

வாழைப்பழத்தில் ஜப்பானின் சமீபத்திய கண்டுபிடிப்பு..!

என்னவென்றால்...

வாழைப்பழத்தில் மஞ்சள் நிற தோலில் கரும்புள்ளிகள் அல்லது கரிய தடங்கள் எவ்வளவுக்கெவ்வளவு காணப்படுகிறதோ அந்த அளவுக்கு அதில் அதிகமான TNF (Tumor Necrosis Factor) என்ற நன்மையானபொருள் ஒன்று உருவாகி, அது நம் உடலில் உள்ள செல்களை பாதுகாப்பதுடன் மிக அருமையான கேன்சர் நோய் எதிர்ப்பு சக்தியாக மாறுகிறதாம்..! அதுமட்டுமில்லாது... பச்சை தோலை விட கரிய தடங்கள் கொண்ட மஞ்சள் தோல் வாழைப்பழம், இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் செயல்பாட்டை ஊக்குவிப்பதில் 8 மடங்கு சிறப்பானதாம்..!

ஆகவே... கரிய புள்ளிகள்/தடங்கள் கொண்ட மஞ்சள் தோல் வாழைப்பழம் ஒன்றை தினமும் சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வோம் சகோஸ்..!

ஒரு நாளைக்கு 3 வாழைப்பழம் ஏன் சாப்பிடவேண்டும்?

நாளொன்றுக்கு 3 வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் "ஸ்ட்ரோக்' ரிஸ்க் குறைகிறது என்று பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காலை உணவு, மதிய உணவு பிறகு மாலையில் ஒரு வாழைப்பழம் என்று நாளொன்றுக்கு 3 வாழைப்பழங்கள் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான பொட்டாசியத்தை வழங்கி அதன் மூலம் மூளையில் ரத்தக் கட்டு ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

எனவே வாழைப்பழம் உள்ளிட்ட பொட்டாசியம் அதிகம் உள்ள உனவுப்பொருட்களான பசலைக்கீரை, பால், மீன், உள்ளிட்ட உணவுப்பொருட்களை எடுத்துக் கொண்டால் ஸ்ட்ரோக்கிலிருந்து தப்பிக்கலாம் என்றே கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

வாழைப்பழங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று இதற்கு முந்தைய ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், தற்போது இந்த ஆய்வு முடிவுகள் மேலும் வாழைப்பழ உபயோகத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

தினசரி பொட்டாசியம் அளவு 1,600மிலி கிராம் இருந்தாலே போதுமானது ஸ்ட்ரோக் ரிஸ்க் குறைகிறது!

ஒரு வாழைப்பழத்தில் சராசரியாக 500மிலி கிராம் பொட்டாசியம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை சரியாக வைத்திருப்பதோடு உடலில் திரவங்களின் சமச்சீர் தன்மையையும் பாதுகாக்கிறது.

பொட்டாசியம் சத்து குறைவாக இருந்தால் சீரற்ற இருதயத் துடிப்பு, வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படும்.

பொட்டாசியம் அளவுடனான உணவுவகைகளை எடுத்துக் கொள்வதில் அனைத்து நாட்டு மக்களுமே பின் தங்கியுள்ளனர்.

பொட்டாசியம் அளவை பரிந்துரைக்கப்பட்ட அளவில் ஏற்றி, உப்பைத் தவிர்த்து வந்தால் ஸ்ட்ரோக்கினால் ஏற்படும் சாவுகளை பாதியாகக் குறைக்கலாம் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வு அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி நடத்தும் இதழில் வெளியாகியுள்ளது

உங்களுக்கு தெரியுமா?

  • வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..

  • குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்..

  • புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.

  • ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?)

  • சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.

  • தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.

  • கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.

  • 8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.

  • சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.

  • இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.

  • திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.

  • கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.

  • எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.

  • 40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழ்ப்பான்.

  • சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.

  • பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.

  • வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.

  • பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.

  • நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.

  • லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.

  • 15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable

  • குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது.

  • எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்கு கண்ணாடி அணிவார்கள்.

  • வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.

  • சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.

  • கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்.

சுருள்பாசி



செல்சுவர் அற்ற சுருள்பாசி எனும் ஸ்பைருலினா ஏறத்தாழ 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது இயற்கையிலேயே முழுமையான போஷாக்கு நிறைந்த ஊட்டச்சத்துக் கொண்டது. இந்த உப உணவில் புரதம் 55 லிருந்து 65 விழுக்காடு உள்ளது. இது உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. ஏனைய உணவுப் பொருட்களுடன் ஒப்பிடும்பொழுது ஸ்பைருலினாவில் உள்ள புரதம் எளிதில் ஜீரணிக்கும் தன்மை கொண்டது.

இத்தகைய இயற்கைப் பொருளான ஸ்பைருலினாவைக் கொண்டு பற்பல உப பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதைப் பதப்படுத்தி மாவு போல் அரைத்து ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம். அது போன்று, சேமியா, சுருள்பாசி ஷாம்பூ, சுருள்பாசி சோப்பு, ஃபேஷியல் ஜெல், சுருள்பாசி மாய்சரைசிங், சுருள்பாசி ஜாம் போன்ற பற்பல மதிப்புக் கூட்டப்ட்ட பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

உலகெங்கிலும் நீலப்பச்சைப்பாசி வளர்க்கப்படுகிறது. இவை, உணவுக்குறை நிரப்பிகளாகவும், முழு உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. நீலப்பச்சைப்பாசி மாத்திரைகளாகவும், அவலாகவும், பொடியாகவும் கிடைக்கின்றது. இவை மீன் வளர்ப்பிலும், மீன் காட்சியகங்கள், கோழிப் பண்ணைகளிலும் தீவனக் குறைநிரப்பியாகப் பயன்படுத்தப்படுகின்றது.
இது ஓரளவு உப்பு மற்றும் காரத்தன்மை உடைய நீரில் வளரக்கூடியது. இதற்கு 1927-ம் ஆண்டு ஒரு ஜெர்மனிய அறிஞரால் ஸ்பைருலினா என்று பெயரிடப்பட்டது. உலகம் முழுவதும் சுமார் 30,000 வகை பாசிகள் உள்ளன. ஆனால் ஸ்பைருலினா பாசி வகையைச் சேர்ந்த புராதன உயிரினம். ஸ்பைருலினாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மனித உடலில் உள்ள செல்களால் சுலபமாக உறிஞ்சப்படும் நிலையில் உள்ளது.
மற்ற உணவுப் பொருள்களைவிட அதிகப் புரதச்சத்து நிறைந்துள்ளது. இந்தப் பாசி உடல் ஆரோக்கியத்தைப் பெருக்கும் மிக முக்கியமான உணவாகத் திகழ்கிறது. அதனால், விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் இந்தப் பாசியையே உணவாக எடுத்துக் கொள்கின்றனர். மீன் உணவில் புரதச்சத்து அதிகம் இருப்பதற்கு அவை பாசிகளை முக்கிய உணவாகக் கொள்வதே காரணமாகும். சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஏற்றது.

கி.பி.1965ஆம் ஆண்டில் ஆப்ரிக்கா நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அங்கிருக்கும் மக்கள் இன்றைய சோமாலியா மக்களைப் போல மெலிந்து போயினர். இருந்தபோதிலும், சார்டு என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் (மடகாஸ்கர் தீவு) மட்டும் பஞ்சத்தால் பாதிப்படைந்தாலும், அதன் அறிகுறிகள் அவர்களின் உடல் நலனை சிறிதும் பாதிக்கவில்லை; வெறும் தண்ணீரை அருந்தி இந்த ஆரோக்கியமான நிலையை அடைந்தி ருந்தனர். இதை ஆய்வுக்காக அங்கே சென்றிருந்த பெல்ஜியம் நாட்டு ஆய்வுக்குழுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களின் ஆய்வுமுடிவுப்படி, சார்டு பகுதி மக்கள் குடித்த தண்ணீரில் பெருமளவு கடல்பாசி எனப்படும் ஸ்பைருலினா கலந்திருந்தது தெரியவந்தது. அப்போது துவங்கிய ஆராய்ச்சிகள் இன்று நாம் அனைவரும் தினசரி சாப்பிட்டால், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவாக ஐ.நா. சபை அங்கீகரிக்குமளவுக்கு உயர்ந்திருக் கிறது.
80% ஆல்கலினும், 20% அமிலத்தன்மையும் சேர்ந்த சமச்சீரான உணவு. பழங்கள், காய்கறிகள், பாசிகள் போன்றவை. 20% அமில உணவு. இறைச்சி, கடல் உணவுகள், கோதுமை போன்றவை. ஒரு கிலோ ஸ்பைருலினாவில் அடங்கியுள்ள சத்துப்பொருட்களின் அடிப்படையில் 1000 கிலோ காய்கறிகளுக்குச் சமம்.

ஸ்பபைருலினா ஒரு செல் தாவரம். இதில் மிகுந்த புரதச்சத்து உள்ளது. வைட்டமின்-a பி6 பி 12, இரும்புச் சத்து, அமினோ அமிலம், கார்போஹைட்ரேட், தாது உப்புக்கள், மக்னீசியம், கால்சியம், பொட்டசியம் உள்ளது. நம் உடலில் உள்ள செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவக sod சூப்பர் ஆக்ஸைடு டிஸ்மியூட்டேஸ் உள்ளது. இது கன்சர் அல்சர் வராமல் தடுக்க உதவுகிறது 100 ஆண்டுகளுக்கு மேல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது இதில் புரதம் 65%, கொழுப்பு 5%, கார்போஹைட்ரேட் 20% உள்ளது. மேலும், இதில் காமா-லினோலெனிக் அமிலமும் உள்ளது.
நுண்ணுயிர்களுள் நுண்பாசியான ஸ்பைருலினா ஏறத்தாழ 350 கோடி ஆண்டுகளுக்கு முன்தோன்றியது. நீலப் பச்சைப் பாசியினத்தை சேர்ந்தது. இப்பாசிதான் ஒளிச்சோர்க்கை செய்த முதல் பாசியினம். அதாவது அன்று இருந்த கார்பன்டை ஆக்ஸைடை சிறப்பாகப் பயன்படுத்தி ஆக்சிஜனை எற்பத்தி செய்தது.

உலகில் சுமார் 25 ஆயிரம் பாசியினங்கள் இருக்கின்றன. இவற்றுள் பெரும் பாசிகளும் நுண்பாசிகளும் அடங்கும். சில பாசியினங்கள் உயிரியல் உரமாகப் பயன்படுகிஙனறன வேறு சில மருத்துவ குணம் கொண்டதாகப் பயன்படுகின்றன. ஏறத்தாழ 75 வகையான பாசியினங்கள் ஒப்பற்ற உணவாகப் பயன்படுகின்றன. இவற்றுள் மிக முக்கியமானது ஸ்பைருலினா பிளாட்டென்சிஸ் என்னும் நீலப்பச்சை நுண்பாசி சிறப்பானது.
1984இல் விட்ரெக் மற்றும் நார்சென்ட்ரிக் என்னும் இரு விஞ்ஞானிகள் ஸ்பைருலினாவை உலகிற்கு ஏற்ற ஒப்பற்ற முழுமையான உணவாகப் பரிந்துரைத்தனர். அதைத் தொடர்ந்து பல நாட்டினரும் ஸ்பைருலினாவை வளர்க்கத் தொடங்கினர்.
அதையொட்டி இந்தியாவில் 1993ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் புல்தானியா மாவட்டத்திலுள்ள லோனார் எனும் ஏரியில் ஸ்பைருலினா வளர்ப்பில் ஈடுபட்டனர்.

பாசிகளுள் மிகச் சிறிய உரு செல் பாசி ஸ்பைருலினா. கடற்பாசிகள் பெரியவை. அவற்றில் 150 மீட்டர் நீளம் வரை வளர்பவையும் உண்டு. பாசிகளில் மக்களுக்கும் மீனினங்களுக்கும் கால்நடைகளுக்கும் உணவாகுபவையும் உண்டு. மேலும் தரம்குன்றிய சில பாசிகள் பயிர்களுக்கு உரமாவதும் உண்டு. நுண்ணுயிர் தாவர மிதவைகள் இல்லையெனில் உற்பத்தி இல்லை.
நிறங்களின் அடிப்படையில் நுண்பாசிகள் பிரிக்கப்படுகின்றன. 1. நீலப்பாசி-ஸ்பைருலினா. 2. பச்சைப்பாசி-குளோரெல்லா, செனிடெஸ்மஸ். 3. சிவப்புப் பாசி – டுனெலியெல்லா. இவை தவிர பழுப்பு, ஊதா, கருஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் கறுப்பு நிறங்களிலும் நுண்பாசிகள் உண்டு.
பாசியினங்களுள் முன்தோன்றியவையும் மிகப் பழமையானவையும் நீலப்பச்சைப் பாசிகளே. ஸ்பைருலினா ஏறத்தாழ 30 ஆண்டுகளாக மக்கள் உண்டு வருகின்றனர். நச்சு ஆபத்தில்லாதது. ஸ்பைருலினா வளர்ப்பதற்கான நிலப்பரப்பு சற்று மேடானதாகவும் திறந்தவெளியாகவும் இருக்கவேண்டும். வேகமான காற்றில் இலைகளும் தழைகளும் விழாத இடமாக இருக்கவேண்டும். வளர்ப்பிடத்தின் அருகே சிதைந்த சாக்கடையோ, தொழிற்சாலை ரசாயனக் கழிவுகளோ இருக்கக்கூடாது. ஸ்பைருலினா வளர்ப்புக்கு நீர் அதிகம் தேவையில்லை. குறைந்த அளவு நீரே போதுமானது. ஆனால் நீர் சுத்தமானதாகவும் வேண்டாத உயிரினங்கள் இல்லாததாகவும் இருக்கவேண்டும். ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து பெறப்படும் நீர் மிகவும் சிறப்பானது. ஸ்பைருலினா பெருநகரங்களில் வீட்டு மொட்டை மாடிகளிலும் பால்கனிகளிலும் வளர்க்கலாம்.
குளிரான பகுதிகளிலும் வெயில் குறைவான இடங்களிலும் இதனை வளர்ப்பது கடினம். சூரிய வெப்பம் 27 செல்லியசு முதல் 37 செல்சியஸ் வரை இருக்கவேண்டும்.
ஆரோக்கியமானதாகவும் திடமுள்ளதாகவும் வளமானதாகவும் நோய் எதிர்ப்புச்சக்தி உள்ளதாகவும் எவ்வித நோய்க்கிருமிகளும் ஒருவகைக் கலப்பினமும் இல்லாமல் சிறிய அளவில் வளர்க்கப்படும் ஸ்பைருலினாவுக்குத் தாய்ப்பாசி (வித்து) என்று பெயர். இதை வைத்துத்தான் சுருள்பாசி பெருக்கம் அடைகிறது. தாய்ப்பாசியை வளர்க்க வேண்டிய இடம் தூசிகள் இல்லாமல் சுத்தமானதாகவும் சமதளம் உடையதாகவும் மரங்கள் மற்றும் செடிகள் இல்லாததாகவும் இருக்க வேண்டும். இதற்கு நேரடியான வெயில் தேவையில்லை. சற்று லேசான வெயில் இருந்தால் போதும். ஸ்பைருலினா வளர்ப்புத் தொட்டிகளிலிருந்து தாய்ப்பாசி வளர்க்குமிடம் 5 மீட்டர் இடைவெளி தூரத்தில் இருக்கவேண்டும்.
ஸ்பைருலினாவின் வளர்ப்புக்கு உகநத ஊட்டச்சத்துகளின் கலவையானது ஸரோகஸ் சூத்திரம் எனப்படும். இதில் ஒரு லிட்டர் நீரில் இடம்பெறும் ஊட்டச்சத்துகள் வருமாறு 1. சோடியம் பைகார்பனேட் 8 கிராம், 2. சோடியம் குளோரைட் 5 கிராம், 3. யூரியா 0.2 கிராம், 4. பொட்டாசியம் சல்பேட் 0.5 கிராம், 5. மக்னீசியம் சல்பேட் 0.16 கிராம், 6. பாஸ்பாரிக் அமிலம் 0.052 மி.லி., 7. ஃபெரஸ் ச்ல்பேட் கரைசல் 0.05 மி.லி.
தொட்டிகளுக்கு ஏற்ற அளவில் ஊட்டச்சத்துகளை மேற்குறிப்பிட்ட அளவுகளில் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து தொட்டியில் ஏற்கனவே நிரப்பியுள்ள நீரில் ஊற்றி பின்னர் தொட்டி முழுவதும் ஊட்டச்சத்துகள் கலந்து விடுமாறு நன்கு கலக்கிவிட வேண்டும். இதன் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து வளர்ப்புக்கான ஸ்பைருலினாவை தாய்ப்பாசித் தொட்டிகளிலிருந்து சேகரித்து தொட்டியின் பல பகுதிகளிலும் இருப்புச் செய்து அவை தொட்டி நீர் முழுவதும் பரவலாக இடம் பெறுமாறு கலக்கிவிட வேண்டும். ஸ்பைருலினாவை இருப்புச் செய்தபின் அன்றாடம் செய்ய வேண்டிய பராமரிப்புப் பணிகளைச் செய்து அவற்றை வளரவிட வேண்டும். வளர்ச்சி மற்றும் மேலாண்மைத் திறனைப் பொறுத்து அவற்றை 7 முதல் 10 நாட்களில் அறுவடை செய்யலாம். சூழ்நிலைக் காரணங்களைப் பொறுத்து ஸ்பைருலினா வளர்ப்புக் காலமும் மாறுபடும்.
ஸ்பைருலினா வளர்ப்புத் தொட்டியில் நீரின் ஆழம் 20 செ.மீ. முதல் 23 செ.மீ. வரை இருப்பது நல்லது. அதிக வெப்ப காலங்களில் 23 செ.மீ. வரையிலும் மழைக்காலங்களில் 20 செ.மீ. வரையும் ஆழம் இருக்குமாறு பராமரிப்பது சிறந்தது. ஸ்பைருலினாவைப் பராமரிக்கும் முறைகள், அறுவடை முறைகள், பதப்படுத்தலும் பாதுகாத்தலும், வளர்ப்புப் பொருளாதாரம், ஸ்பைருலினா பயன்படுத்தும் முறை போன்ற பல முறைகள் சுருள்பாசி வளர்ப்புப் பயிற்சியில் உள்ளன.
சுருள் நீலப் பச்சைப்பாசி மனிதன் தோன்றுவதற்கு ஏறத்தாழ 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நுண்ணுயிரி. சூரிய ஒளியின் மூலம் ஒளித்தொகுப்பு செய்து உணவுத் தயாரித்து வாழ்ந்த தாவரங்களில் ஸ்பைருலினாவும் ஒன்று.
ஸ்பைருலினா செல்லில் சிலியா கிடையாது. அதனால் நீந்திச் செல்ல இயலாது. ஆனால் மிதக்கத்தக்கது. நீரின் மூலமும் ஃபிளமிங்கோ என்னும் பறவை மூலமும் ஸ்பைருலினாவின் பரவல் நடைபெறுகின்றது. ஃபிளமிங்கோ பறவை ஸ்பைருலினா வளர்கின்ற நீரை அதிகமாக விரும்பி அங்கு சென்று பருகுகின்றன. அப்போது அதன் கால்களிடையே ஸ்பைருலினா பாசி ஒட்டிக்கொண்டு மற்ற நீர்நிலைகளுக்கும் பரவுகின்றன.
ஸ்பைருலினா வளர்ப்பிலும் உற்பத்தியிலும் சீனா முதலிடம் வகிக்கிறது. தொழிற்சாலைகள் மூலம் 1090ல் சீனா ஸ்பைருலினா வளர்ப்பைத் தொடங்கியது. இன்று சுமார் 100 ஸ்பைருலினா உற்பத்தித் தொழிற்சாலைகள் உள்ளன. உலகில் மிகப் பெரிய அளவிலும தீவிர முறையிலும் ஸ்பைருலினாவை வளர்க்கும் பண்ணைகள் அமெரிக்காவில் உள்ளன. தாய்லாந்து, சிலி, பல்கேரியா, வியட்நாம், கியூபா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் ஸ்பைருலினா வளர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
1970ல் முருகப்பா ஆராய்ச்சிக் குழுவினர் நுண்பாசிகள் பற்றிய ஆராய்ச்சிகள் செய்தனர் இவற்றில் ஸபைருலினாவும் ஒன்று.1973ல் மைசூரில் உள்ள மத்திய உணவு நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வெற்றிகண்டது. இதனைத் தொடர்ந்து பல தொண்டு நிறுவனங்களும் அறக்கட்டளைகளும் ஸ்பைருலினா வளர்ப்பில் ஈடுபட்டன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் நத்தம் கிராமத்தில் ஈழ அகதிகள் மறுவாழ்வுக் கழகமும் மதுரையில் உள்ள ஆன்டேனா அறக்கட்டளையும் மற்றும் பிற நிறுவனங்களும் ஸ்பைருலினா வளர்ப்பில் முன்னணியில் உள்ளன.
இதை வீட்டுப்பெண்கள் கற்று வியாபரம் செய்யலாம். இளைஞர்கள் முழுநேரப் பணியாகவும் செய்யலாம். இதை உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு ஏற்றுமதி வியாபாரம் செய்யலாம்.
ஸ்பைருலினா வளர்ப்புப் பயிற்சியில் 10 ஆண்டு அனுபவம் பெற்ற ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் மக்களுக்கும் சிறந்த பயிற்சியை வழங்கி வருகிறார்கள். மூன்று நாள் பயிற்சிக்கு தஙகும் வசதி, உணவோடு ரூ. 6500 கட்டணம் வசூலிக்கிறார்கள்.
தொடர்புக்கு ரத்தினராஜசிங்கம் 9884000413.

Saturday, 9 August 2014

முன் ஜென்மத்துக்கு போகலாம் வாங்க

பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ? 
உங்களை ஒரு சவா லான  பயிற்சிக்கு அழை க்கிறார் சென்னை டாக் டர். கேட்பதற்கு கொஞ்ச ம் டூபாக்கூர் போலத் தெரியும்.ஆனால் கண் ணால் காண் பதும் பொய் ! காதால் கேட்பதும் பொ ய் தீர விசாரிப்பதே மெய் என்ற சொல் எதற்கு பொ ருந்துமோ தெரியாது, இந்த டாக்டருக்கு நூறு சதவிதம் பொருந்தும்.
முற்பிறவிப் பற்றி பலகதைகள் கேட்டு இருக்கிறோம், காமிக்ஸ் புத்தகங்களில் படித்து இருக்கிறோம்,ஆனால் நிஜத்தில் அப்படி நட க்கிறது என்று சொன்னால் நம்புவோமா? அதுவும் இந்த கம்ப்யூ ட்டர் யுகத்தில் உங்களை பூர்வஜென்மத்திற்கு கொ ண்டு செல்கிறேன் என் று ஒருவர் சொன்னால் “என்ன வச்சு காமெடி கிமடி பண்ணலை இல் லைனு கேட்கத்தோணும் இல்லையா?. ஆனால் முடியும் என்று சவால் விடுகிறார் ஒரு உளவி யல் சிகிச்சை நிபுணர். இது என்ன டிவி-யில் பேசி கல்லு விக்கிற சமாச்சாரம்போல இருக் குமோ என்று பார்த்தால் கண்முன்னால் சாதி த்து காட்டுகிறார் இந்த உளவியல் நிபுணர் சி.ஜெ.ஜெயச்சந்தர். 

 
பெங்களுரில் உளவியல் சிகிச்சைமையம் நட த்திவரும் சென்னையை சேர்ந்த இவர் ,பூர்வ ஜென்மம் பற்றிய ஆராய்ச்சியாளரும் கூட. உலக புகழ்பெற்ற முற்பிறவி ஆராய்ச்சி மேதை டாக்டர்.ஹாண்ஸ் டேண்டம்-ன் மாணவரான இவர் யாரையும் ஒரு டீ குடிக்கும் அவகா சத்திற்குள் ஆழ்நிலைக்கு ஆழ்த்தி முற்பிறவிக்கு கொண்டு போகி றார்.
                     பெங்களுரில் ஒரு மழைகால மாலைப்பொழுது அவரின் பயிற்சி 
மையத்தில் காத்திருந்தோம்.ஒரு நடுத்தர வயது மனிதர் அவர், தோற்றத்தைப் பார்க்கும்போது பெரும் பணக்காரர் என்று தெரிகிறது, என்ன பிரச்சனை என்று கேட்கிறார் ஜெய ச்சந்தர். உடல்முழுவதும் இனம் காண முடி யாத வலி என்கிறார் அவர்.
”எப்போதில் இருந்து”
“எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து”
”முன்பு ஏதேனும் சிகிச்சை எடுதிருக்கிறீர்களா..?”
வந்தவர் ஒரு பெரிய பைலைக் காண்பிக்கிறார்.அவரின் சொத்தில் பாதி கரைந்து மருத்துவ அறிக்கைகளாக இருக்கிறது.
“இவ்வளவு சிகிச்சை பண்ணியும் குணமாகலையா ?”

                         ஆச்சர்யமுடன் கேட்கிறார் டாக்டர்.
“ வலி இன்னும் இருக்கிறது…குறையவில்லை…!” வந்தவர் கண்களில் வேதனை தெரிகிறது.
”சரி நாம முயற்சி பண்ணி பார்க்கலாம்..” என்ற டாக்டர் அவரை   
வசதியாகப் படுக்கச்சொல்கிறார். கண்களை மூடிக்கொண்டே மூச்சை மட்டும் கவனிக்கச்சொல்கிறார்.சில நிமிடங்கள் பேச்சுக்கொடுத்துக் 
கொண்டே அவரை ஆழ்நிலைக்கு கொண் டு செல்கிறார்.
இயல்பாக பேசிக்கொண்டிருந்த அந்த நபரின் குரலும் உடல்
 பாவனைகளும் திடீரென மாறுகிறது. அவர் உச்சரிக்கும் வார்த்தைகளும் முகமாற்றங்களும் நம்மை ஒரு ஆச்சர்யமான நம்புவதற்கு கடினமான உலகிற்கு அழைத்துச் செல்கிறது.
அந்த நபர் ஒரு போர்களத்தில் நிற்கிறார்.
காலம் அவரால் சொல்லமுடியவில்லை.
இடையிடையே புரியாத மொழியில் கட்டளையிடுகிறார்.
அவரிடம் பேச்சிக்கொடுக்கும் டாக்டர் “ நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்” என்று கேட்க அவர் “ நான் போரில் சண்டையிட்டு கொண்டி ருக்கிறேன்” என்கிறார்.
மனிதர் தூக்கத்தில் இருந்தாலும் உடல் மொழி ஒரு போர்வீரன்
 மும் முரமாக சண்டையிடும் அசைவுகளைத் தருகிறது.அவரிடன் 
பேச்சுக்கொடுத்துக்கொண்டே மேலும் ஆழமாக பின்னோக்கி செல்ல அவரின் ஆழ்மனதுக்கு கட்டளை யிடுகிறார் டாக்டர்.
மேலும் மேலும் ஆழமாக செல்லும் நபர் மிகுந்த வலியை மனதில் காண்பித்தவராக “ஆ……….!” என்ற அலறுலுடன் கைககளைத் தூக்கி நெஞ்சிற்கு நேராக நீட்டி எதையோ பிடுங்குவது போல பாவனை செய்கிறார்.
அவரின் முகத்தில் மரண வேதனை தெரிகிறது. கொஞ்சம் மூச்சு திணறலுடன் மீண்டும் மீண்டும் எதையோ பிடுங்வது போல முயற்சி செய்கிறார். அவரின் பாவனையைப் பார்க்கும் டாக்டர் 
“என்ன நடக்கிறது..!” என்று கேட்கிறார்.
“ என் நெஞ்சில் ஈட்டி பாய்ந்துவிட்டது..” என்கிறார்.
“நீங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள் ?”
“நான் இறந்துகொண்டு இருக்கிறேன்..” அந்த நபர்.
”எப்படி இறக்கிறீர்கள்…!”
“ஈட்டியால் குத்தப்பட்டு..”
” இப்போது எங்கு இருக்கிறீர் கள் ”
“கீழே என் உடல் இருக்கிறது….நான் உடலின் மேல் மிதந்துக் கொண்டிருக்கிறேன்…”
“உடல் எப்படி இருக்கிறது”
“அது ஈட்டிக் குத்தப்பட்டு உயிரற்று கிடக்கிறது”
இதைக்கேட்டவுடன் ஏதோ புரிந்து போல் முகமாற்றம் அடைகிறார். நம்மிடன் கிசுகிசுப்பாக, இவரின் ஒரு பிறவியில் ஏற்பட்ட இந்த 
நிகழ்வுதான் இன்றைய இப்போதைய  உடல்வலியாக தொடர்கிறது. இந்த மனிதருக்கு உளவியல் ரீதியாக ஒரு சிகிச்சைத் தருவோம் என்கிறார்.
பின்னர் அவருக்கு நம்பிக்கையூட்டும் சில  
ஆழ் மனக்கட்டளைகளை பிறப்பிக்கிறார், பின்னர் அவர் மனதிற்கு வலிவூட்டி, அவரே அந்த ஈட்டியை பிடுங்கி எறியுமாறு உத்தரவு தருகிறார். அவர் ஈட்டி பிடுங்கும் பாவனைகள் நம்மை மிரட்டுகின்றன, டாக்டர் அலட்டிக் கொள்ளாமல் அவருக்கு கட்டளைத் தருகிறார். ஈட்டியை பிடுங்கி எறிந்த நிம்மதியுடன் அவரின் உடலும்,மனமும் சீரான நிலைக்கு வருகிறது.
சிறிது நேரத்தில் பழையபடியே கண்விழிக்கிறார் அந்த நபர். இப் போது அவர் முகத்தில் ஏதோ ஒரு தெளிவு தெரிகிறது.
சிகிச்சை முடிந்து நம்மை பார்த்து சிரிக்கிறார் ஜெயச்சந்தர்.நாம் நம்பிக்கையில்லாமல் நோயாளியைப் பார்க்க,அவர் நிம்மதியான மகிழ்ச்சியுடன் இருக்கிறார். தான் ஆழ்நிலைத்தூக்கத்தில் பார்த்ததை இன்னொருமுறை விளக்குகிறார். சிகிச்சையின் பலனை முழுவதும் நம்புகிறார் என்று அவரின் பேச்சு உணர்த்துகிறது.
நமக்கு கொஞ்சம் குழப்பமாகதான் இருக்கிறது.


 இது ஏதேனும் கண்கட்டி வித்தையாக இருக்குமோ என்ற எண்ணம் எழ, டாக்டரே மீண்டும் பேசுகிறார்.
” என்ன சார்..இன்னும் நம்பிக்கை இல்லையா..? நீங்கள் விரும்பினால் உங்களையும் முன் ஜென்மத்திற்கு கொண்டு செல்கிறேன்…!” எ ன்கிறார்.
கொஞ்சம் யோசனைக்குப் பிறகு “என்னதான் சமாச்சாரம் பார்த்துவிடுவோமே..!” என்று தோன்ற தயாரானேன்.
அதே போன்ற சாய்வு நாற்காலியில் படுத்துக்கொள்ள, கண்களை மூடிக் கொண்டே நூறு முதல் தலை கீழாக சொல்லுமாறு கூறுகிறார் உளவியல் சிகிச்சை நிபுணர் ஜெயச்சந்தர்.
உள்ளுணர்வு விழிப்படையச் சொல்லி ஓசையெழுப்ப கொஞ்சம் உஷாராகவே எண்களைச் சொல்லி  வந்தேன்.
கொஞ்சம் தூக்கம் வருவது போல் இருந்தது.
உள்மனம் உஷார்…..உஷார் என்று சொல்ல…. மீண்டும் பலமாக உச்சரி த்தேன்.
நிபுணர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மீண்டும் முதலில் இருந்து எண்ணுமாறு கூறுகிறார்.
மீண்டும் எண்ணத் தொடங்கினேன்.
நூறு….
தொண்ணுற்றி ஒன்பது….
தொண்ணுற்றி எட்டு….
தொண்ணுற்றி ஏழு…..
“…………………………………………….”
“…………………………………………….”
“எண்பத்தி ஒன்று….”
“………………………………………………”
“ எ…ழு…ப….த்……”
“அ…று….”
எப்போது அறுந்து போனேன் என்று தெரியவில்லை…நிஜ உலகில் இருந்து அறுந்து போனேன்.
சுயநினைவு இருந்து போலவும்…இல்லாதது போலவும் இருந்தது…
ஒரு குரல் என்னை கட்டுப்பாட்டிம் வைத்திருந்தது.
உளவியல் சிகிச்சையாளரின் மெல்லியக் குரல்.
” என்னுடன் பேசுங்கள்…..நீங்கள் பயப்பட தேவையில்லை…”
“…………………………………………………………”
“என்னுடன் பேசுங்கள்…பயப்படவேண்டாம்……என்னுடன் பேசுங்கள்…நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்….”
“ நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்……”
கிணற்றுக்குள் ஒலிப்பதைப்போல அந்த குரல், என்னுள் ஆழமாக ஊ டுருவ என்னை சுற்றிலும் பார்த் தேன்.
நான் ஒரு விமானத்தில் அமர்ந்து இருந்தேன்.
விமானம் பறந்துகொண்டிருந்து.
பார்பி பொம்மை போன்ற அழகு பணிப்பெண்கள்,முன்னும் பின்னும் நடந்துசென்று பயணிகளுக்கு சேவையாற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்க்கும்போதே பயனிகளின் கண்களிலும் பட்டாம் பூச்சி பறந்துகொண்டிருந்தது.
எனக்கும்தான்….!
”நேகா…” என்ற ஒரு தேவதையை அழைத்து தண்ணீர் கேட்டேன்.
“ஹும்….!…….எனக்கு ஏற்பட்டதோ வேறு தாகம்,ஆனால் ஓடும் விமானத்தில் அவளிடம் தண்ணீர் மட்டும்தானே கேட்கமுடியும் ?
”ஒன் மினிட்..” என்று ஒய்யார நடைப்போட்டு அவள் செல்ல,அவள் விட்டு சென்ற பர்பியூம் வாசத்தை மோப்பம் பிடித்து என் நினைவு நாய்போல் சென்றது.
கண்களை மூடிக்கொண்டு அந்த தேவதையின் வரவிற்காக காத் திருந்த அந்த வினாடி நேரம்…..
“ டமார்…….”
என்  உடல் அதிர்ந்தது. உடல் முழுவதும் உஷ்ணம் பரவ…. விமானம் சிதறி…ஒரு பெரும் ஜுவா லையாக கீழே போய்க் கொண் டிருக்க….
நாங்கள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தோம்..
கடவுளே….! எங்கள் உடல் எங்கே….?
கீழே புகையும் நெருப்பும் ….கீழே….கீழே…..புவியீர்ப்பில் சென்று கொண்டிருந்தது.
கடவுளே என் உடல்…..எங்கே?
அந்த எரிந்துவிழும் புழுதிக்குவியலில்… எது என் உடல்.
எனக்கு புரிந்து.
நான் இறந்துவிட்டேன். என் விமானம் வெடித்து சிதறிவிட்டது.
என்னைப்போல உடலைத் தொலைத்த நேகா தேவதையும், இன்னும் பிற தேவதைகளும் இதோ உட லைத்தொலைத்து என்னைப் போல.. என்னைப்போல…. மிதந்து கொண்டு…..
எந்த உடல் என்னுள் ஹார்மோன் சுரப்பிகளைத்தூண்டிவிட்டதொ…அந்த உடல்
அழிந்து…வெறும் என்னைப்போல்…..
என்னுள் ஒரு அதிர்வு ஏற்பட்டது.
மேற்கண்ட காட்சிகளை உளவியல்சிகிச்சை நிபுணரிடம் ஒரு
வாக்குமூலம் போல் ஒப்பித்துக்கொண்டிருந்தேன்.
“இது எந்த ஆண்டு கேட்கிறார்..” உளவியல் நிபுணர்.
”1978..”
“எந்த இடம் ? “
அனைவரும் ஹிந்தியில் பேசுகிறார்கள……பம்பாயாக இருக்கவேண்டும்…”
சில நிமிடங்கள் டாக்டர் சில ஆழ்மனக்கட்டளைகளை சொல்கிறார்.பின்னர் சில நிமிடங்களில் நிஜ உலகிற்கு வந்தேன்.
நம்பமுடியவில்லை என் ஆழ் மனதில் ஒரு படம் போல் பார்த்த காட்சிகள் என் புனர்ஜென்ம நிகழ்வுகளா..? இல்லை வெறும்….கற்பனையா..?
“இங்கபாருங்க சார்….டாக்டர் தன் லேப்டாப்பில்,இணையத்தில் தேடி,ஒரு தகவலைக்காட்டுகிறார்,
எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
மும்பையில் இருந்து துபாய்க்கு சென்ற ஏர் இந்தியா விமானம் மும்பை கடற்பரப்பில் வெடித்து சிதறியது பற்றிய செய்தி. நடந்த ஆண்டு 1978,
”நான் பிறந்த ஆண்டு 1978”
”உங்களுக்கு விமானம் என்றால் ரொம்ப பிடிக்கும்தானே…?” டாக்டர் கேட்க
“அய்யோ பிளைட்னா எனக்கு பயம், பறப்பதற்கு பயந்தே…நான் பல வெளிநாட்டுப் பயண வாய்ப்புகளை தவிர்த்து இருக்கிறேன்….”
“அதற்கு காரணம் உங்களின் இந்த முன் ஜென்ம நிகழ்வுதான்…..இப்போது கண்களை மூடி….யோசித்து சொல்லுங்கள்….. உங்களுக்கு இப்போது பறப்பதற்கு பயமா..?
“கண்களை மூடி யோசித்துப் பார்த்தேன்…விமான என்று நினைத்தால் முன்பு வரும் ஒரு உதறல்.,இப்போது எழவில்லை…….பறந்து பார்க்கலாமே என்ற ஆவல் வந்தது.
டாக்டர் சிரித்தார்.
”என்ன சார் இன்னும் நம்பலையா ?….உங்களுக்கு உளவியலில் ஆர் வம் இருந்தால் இரண்டு நாள் என்னுடன் இருங்கள்…..இதை உங்களுக்கும் சொல்லித்தருகிறேன்…..”
இரண்டு நாள் பயிற்சியில்.எல்லாம் பிடிபட்டது.
நம்பிக்கை வந்தது..
புனர்ஜென்மம்…முற்பிறவி என்பது உண்மையே.
இப்போதெல்லாம் என் பொழுதுபோக்கு நண்பர்களை பூர்வ ஜென் மத்திற்கு அழைத்துசெல்வது தான். அவர்களின் பூர்வஜென்ம கதைகளை கேட்பதில் எனக்கு சுவரஸ்யம் என்றால்….உண்மையில் அவர்களின் பல உளவியல் பிரச்சனைகள் தீருவதாக கூறு கிறார்கள்.
உண்மையில் இதனை காவி உடை போட்டுக்கொண்டு செய்தால், நானும் கடவுளின் அவதாரம் என்று எல்லோரும் கொண்டாடுவார்கள்.
ஆனால் இது அறிவியல் சார்ந்த கலை,அனைவரும் ஒளிவு மறைவு இன்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புவர்களுக்கு
 கற்று த்தருகிறேன் என்கிறார் உளவியல் சிகிச்சை நிபுணர்
 திரு.சி.ஜெ.ஜெயச்சந்தர். ஆர்வம் உள்ளவர்கள் முன்பதிவு செய்ய லாம்
கைப்பேசி : 09886420936  /  9176952838 /  9551546565
மின்னஞ்சல் : info@basixinc.or
இணையம் : www.basixinc.org 

Friday, 8 August 2014

டீ கடை பஜ்ஜி,போண்டா - வயிற்று புற்றுநோய்

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது.

கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த வயிற்றுப் புற்றுநோயாளிகளிடம் அஃப்ரோஷ் நயீம் என்ற மாணவர் எடுத்த புள்ளியியலின் படி மேற்படி நோயாளிகளில் பெரும்பாலானோர் தினம் தோறும் பஜ்ஜி, வடை சாப்பிடுபவர்களாய் இருந்திருக்கிறார்கள். சில பேர் புகையிலை பயன்படுத்துபவர்களாகவும், சிலர் புகை பிடிப்பவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள்.

டீக்கடைகளில் விற்கப்படும் போண்டா, பஜ்ஜி, வடைகள் ரீயூஸ் என்று அழைக்கப்படும் முன்பே பயன்படுத்திய எண்ணெய் கலந்து தயார் செய்யப்பட்டவை என்கிறது ஒரு புள்ளி விபரம். ரீபைண்ட் ஆயில்களினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முன்பே எழுதி இருந்தேன்.

பெரும்பாலான டீக்கடைகளில் பாலை சுட வைப்பதே இல்லை. வடை, போண்டா, பஜ்ஜி, சமோசா போன்ற எண்ணெய் பதார்த்தங்கள் பயன்படுத்திய எண்ணெயுடன், புதிய எண்ணெயை சேர்த்துத்தான் தயார் செய்கின்றார்கள். அதுமட்டுமல்ல சுவீட் கடைகளிலும் கூட இதே வேலையைத்தான் செய்கின்றார்கள்.

யார் யாரெல்லாம் தினம் தோறும் டீக்கடையில் பஜ்ஜி, போண்டா சாப்பிடுகின்றார்களோ அவர்களுக்கு வரக்கூடிய நோய் “வயிற்றுப் புற்று நோய்”.  நோய் வேண்டுமா இல்லையா என்பதை சாப்பிடுபவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள்.
 
நன்றி
கோவை எம் தங்கவேல்
http://thangavelmanickadevar.blogspot.com/2012/01/blog-post_05.html

சூரிய ஒளி மின்சாரம்

சூரிய ஒளி மின்சாரம்
எந்த விஷயமாக இருந்தாலும் அமெரிக்காவை பார், ஜப்பானை பார் என இண்டர்நெட்டில் தகவலை தேடியெடுத்து பதிவு போடுவதே நமக்கு தொழிலாகிவிட்டது. அந்த நாட்டு மக்களின் வாழ்க்கை தரம், நம் நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் இவற்றை ஒப்பிட்டு பார்த்து அதன் பின்பே அது ஒத்து வருமா வராதா என முடிவெடுக்க வேண்டும்.

தமிழக அரசு சூரிய மின் சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும், எளிய மக்களுக்கு அரசு கட்டி கொடுக்கும் வீடுகள் இனி சூரிய ஒளி மின்சார வசதியுடம் பசுமை வீடுகளாக கட்டிக்கொடுக்கப்படும் என கவர்னர் உரையில் குறிப்பிட்டுள்ளது.  அதனால் இனி மக்கள் இது தொடர்பான பதிவுகளை போடுவார்கள். மின்சாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மற்றவர்களை விட எனக்கு அதிகமாக தெரியும்.  

மின்சாரம் இரண்டு வகைப்படும். 1. ஏசி கரண்ட் (Alternative Current). இந்த வகை மின்சாரத்தை தான் நாம் வீடுகளில் உபயோகப்படுத்துகிறோம். இதன் மின் அழுத்தம் (VOLT) 220 V ஆகும். லைட்டிலிருந்து அனைத்து மின் சாதனக்களும் 220V. ஏசி -ல் இயங்குபவை. இவ்வகை மின்சாரத்தை சேமிக்க முடியாது. உதாரணத்திற்கு ஒரு மின்நிலையம் 100 MW மிசாரத்தை உற்பத்தி செய்யும் பொழுது, 60MW மின்சாரம் மட்டுமே உபயயோகப்படுத்தப்பட்டால், மீதி மின்சாரத்தை சேமிக்க முடியாது.
இரண்டாவது வகை டி.சி எனப்படும் டயரக்ட் கரண்ட் (DIRECT CURRENT). இதை நடைமுறையில் பாட்டரி கரண்ட் என சொல்லுவோம். அதாவது சேமிக்கப்பட்டு தேவைப்பட்ட நேரத்தில் உபயோகிக்ககூடியது. தேவைபடாத நேரத்தில் பாட்டரியில் இருக்கும் மீதி மின்சாரம் அடுத்த முறை உபயோகத்திற்கு பயன்படும்.

இனி சூரிய ஒளி மின்சாரத்தை பற்றி பார்க்கலாம். சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை தயாரிக்க கூடியது பி.வி (photovoltaicCell) எனப்படும் சிரிய பாட்டரியாகும். தேவைப்படும் மின்சாரத்திற்கேப பல பாட்டரிகளை இணைத்து பிளேட் வடிவத்தில் அமைக்கப்படுவது தான் சோலார் பேனல் ஆகும். இது 15W 12V, 30W-12V என பல அளவுகளில் தயாரிக்கப்படுகிறது.

இந்த படத்தில் 9 சோலார் பானல்கள் இணைக்கப்பட்டுள்ளது.

சோலார் பானல்கள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பாட்டரிகளில் சேமிக்க வேண்டும். அதன் பின் பாட்டரி மின்சாரத்தை நம் உபயோகத்திற்கான 220V ஏ.சி மின்சாரமாக மாற்ற வேண்டும். இதற்கு  இன்வெர்ட்டர் என்ற உபகரணம்  பயன் படுகிறது. 

சோலார் பானல்கள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு சூரிய ஒளியை பொருத்தது என்பதால், மின்சாரம் ஒரே அளவில் இருக்காது. அது பாட்டரியின் சார்ஜிங் அளவை காட்டிலும் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கும். அப்படியே அதை பாட்டரியில் சார்ஜ் செய்தால் பாட்டரி கெட்டுவிடும். இதை தடுக்க சார்ஜ் ரெகுலேட்டர் என்ற கருவி வழியாக சோலார் மின்சாரத்தை பட்டரியில் சார்ஜ் செய்ய வேண்டும்.


 சார்ஜ் ரெகுலேட்டர்


12V / 100Ah பாட்டரி

இவ்விதம் பாட்டரியில் சேமிக்கப்பட்ட மிசாரத்தை  இன்வெர்ட்டர் மூலம் 220 வோல்ட் ஏசி மின்சாரமாக மாற்றவேண்டும்.


INVERTER
 
சோலார் பானல், ரெகுலேட்டர், பாட்டரி, இன்வெர்ட்டர் இவற்றை எல்லாம் எப்படி இணைக்கவேண்டும் என்பதை கீழே உல்ள படம் விளக்கும்


இணைப்பை விளக்கும் படம்

ஒரு சிறிய வீட்டிற்கு அல்லது ஒரு வீட்டின் ஒரு பகுதி மின்சார தேவையை சோலார் பவர் மூலம் பூர்த்தி செய்வதைப்பற்றி பார்ப்போம். இதற்கு முதலில் ஒரு நாள் ஒன்றிற்கு எவ்வளவு மின்சாரம் (UNIT) தேவை என்பதையும், ஒரே நேரத்தில் (Maximum Power Consumption at a time)  அதிகப்படியாக எவ்வளவு மின்சாரத்தை உபயோகிப்போம் என்பதை கணக்கிட வேண்டும்.

ஒரு யூனிட் என்பது 1000 வாட் பல்பு ஒரு மணி நேரம் எரிந்தால் அதற்கு தேவைப்படும் மின்சாரம் ஆகும் 100 வாட் என்றால் 10 மணி நேரத்திற்கு தேவைப்படும் மின்சாரம்.

எந்தெந்த உபகரணங்கள் எவ்வளவு வாட் என்பதை தெரிந்து கொள்வோம்.

Fan                                                  60WATTS
Tube Light                                        40WATTS
Television                                          100 WATTS

ஒரு நாளில் உபயோகப்படுத்தப்படும் மின் சாதங்களின் அட்டவணை

டி.வி                     1          100 W    3 மணி நேரம்                    300 வாட்ஸ்
ஃபேன்                 1            60 W     12 மணி நேரம்                  720 வாட்ஸ்
டியூப் லைட்     3            40 W      4 மணி நேரம்                   480 வாட்ஸ்
                                                                       மொத்தம்               1500 வாட்ஸ்

ஒரே நேரத்தில் அதிகப்படியாக உபயோகிக்கும் மின்சாரத்தை கணக்கிடலாம். அதிகப்படி மின்சாரத்தை செலவு செய்வது இரவு 6.30 முதல் 9.30 வரைதான். அதன்படி பார்த்தால் 3 டியூப் லைட்டுகள்( 3 * 40 =120 வாட்ஸ்), டிவி (1* 100= 100வாட்ஸ்), பேன்(1*60= 60 வாட்ஸ்) எல்லாம் சேர்ந்து 280 வாட்ஸ். ஆக நமக்கு தேவை 600 VA திறன் (Capacity) கொண்ட இன்வெர்ட்டர்.

 நாள் ஒன்றுக்கு  1500 வாட்ஸ் அல்லது 1.5 யூனிட் மின்சாரம் தேவை.

சோலார் மின்சாரத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டியவர்கள் 3 நாட்களுக்கு தேவையான் மின்சாரத்தை பெற்று சேமிக்கும் வகையில் சோலார் பேனல்களையும், பாட்டரிகளையும் இணைக்கவேண்டும்.

நாம் இங்கு ஒரு நாள் தேவையை மட்டும் பூர்த்தி செய்யும் திறன் கொண்ட சோலார் யூனிட்டை பற்றி பார்க்கலாம்.

100 வாட் / 12 வோல்ட் சோலார் பேனல்   1  உத்தேச விலை =  ரூ.20,000 
600 VA இன்வெர்ட்டர்  1    உத்தேச விலை                                         =   ரூ. 4000.    
100 Ah பாட்டரி 2                                                                                            =    ரூ.12,000
சார்ஜ் ரெகுலேட்டர்                                                                                   =     ரூ. 2000
இதர செலவுகள்                                                                                          =     ரூ.7000
ஆக உத்தேச செலவு                                                                                =  ரூ 45,000 -50000 

இது ஒரு நீண்ட கால் முதலீடு.

சோலார் பேனலின் ஆயுட் காலம் 30 ஆண்டுகளுக்கு மேல். கம்பெனி வாரண்டி 20 வருடங்கள்.
பாட்டரி சுமார் 4-5 வருடங்கள் வரும் 

இதை 20 வருடகால முதலீடாக பார்த்தால் 3 தடவை பாட்டரி மாற்ற வேண்டியிருக்கும்.  20 வருட காலத்தில் இன்வெர்ட்டர் பழுது ஏற்பட்டால் மாற்றவோ அல்லது ரிப்பேர் செய்யவோ வேண்டியிருக்கும். பாட்டரி, இன்வெர்ட்டர் வகைக்கு அதிகப்படியாக 40,000 ரூபாயை சேர்த்தால் 90,000 ரூபாய் முதலீடு ஆகும்                                                                                                                 

மாதம் ஒன்றுக்கு 50 யூனிட் என்றால் 20 வருட கால்த்தில் 12,000 யூனிட் மின்சாரம் கிடைக்கும்.

90,000 ரூபாய் முதலீட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் உற்பத்தி செலவு ரூ 8 ஆகும்.

இதே கணக்கை 5 வருடம் என பார்த்தால் பாட்டரி மாற்ற வேண்டாம் அப்பொழுது 1 யூனிட்டுக்கு  கிட்டத்தட்ட 16 -18 ரூ உற்பத்தி செலவு வரும்.


பிரமிடு

பிரமிடு என்று சொன்னால் உங்களுக்கு எது ஞாபகத்துக்கு வரும்? எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுதானே? பட்டை கூம்பு வடிவிலான இந்தப் பிரமிடு பழைய உலக அதிசயங்களுல் ஒன்று என்பது நீங்கள் அறிந்ததுதான். ஆனால், எகிப்தில் மட்டுமல்ல, சூடான், நைஜீரியா, கிரீஸ், இந்தோனோசியா, மெக்சிகோ உள்ளிட்ட இன்னும் சில நாடுகளிலும்கூட பிரமிடுகள் உள்ளன.

 எகிப்து : இங்கு தற்போது வரை சுமார் 135 பிரமிடுகள் கண்டறியப்பட்டுள்ளன. பெரும்பாலான பிரமிடுகள் தலைநகர் கெய்ரோவுக்கு அருகே உள்ளன. குட்டி பிரமிடுகள் முதல் பிரம்மாண்டமான பிரமிடுகள் வரை இதில் அடக்கம். இவற்றில் கிசாவில் உள்ள பிரமிடுகளே உலக அதிசயத்தில் இடம்பெற்றுள்ளன. பேரரசர்கள், அவரது குடும்பத்தினரை அடக்கம் செய்ய இந்தப் பிரமிடுகள் கட்டப்பட்டன.
 
சூடான்: எகிப்தைவிட அதிக பிரமிடுகள் சூடானில் உள்ளன. இங்கு 220 பிரமிடுகள் இருக்கின்றன. நுபியர்கள் காலத்தில் இங்கே குட்டிக் குட்டி பிரமிடுகள் கட்டப்பட்டன. எகிப்து பிரமிடுகள் போல் அல்லாமல், செங்குத்தாகவே இவை அமைக்கப்பட்டன. இவை எல்லாம் கல்லறைகளே. 

 நைஜீரியா: தலைநகர் அபுஜாவில் குபோ நாகரிகத்தின்போது, சுடே பிரமிடுகள் கட்டப்பட்டன. இங்கு 10 பிரமிடுகள் உள்ளன. இவையெல்லாமே களிமண்ணால் ஆனவை. இவை எல்லாமே 3 அடி உயர குட்டி பிரமிடுகள்தான். இந்தப் பிரமிடுகள் கடவுளுக்காகக் கட்டப்பட்டவை. 
 
கிரீஸ்: பண்டைய கிரீஸில் ஹெலனிக்கோன் என்ற நகருக்கு அருகே 2 பிரமிடுகள் கட்டப்பட்டன. இவை கி.மு. 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அர்கோஸ் ஆட்சிக்காகப் போராடிய வீரர்களின் நினைவாக இந்தப் பிரமிடுகள் கட்டப்பட்டன. 

 இந்தோனேசியா: இங்குப் போரோபுதூரில் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த சமயப் பிரமிடு ஒன்று உள்ளது. இதில் இந்தியக் கட்டிடக் கலையின் தாக்கமும் உள்ளது. மூதாதையர் களின் ஆவிகள் வாழ்வதாக வைக்கப்பட்ட நம்பிக்கைக்காக இந்த பிரமிடு கட்டப்பட்டது. 

மெக்சிகோ: சிச்சென் இட்சா என்ற இடத்தில் எல் காஸ்ட்டிலோ என்ற பிரமிடு உள்ளது. உண்மையில் இது படிக்கட்டுகளால் ஆன பிரமிடு போன்ற தோற்றமுடைய ஒரு கோட்டை. மாயன் கலாசாரத்தைச் சேர்ந்த மக்கள் இதை கட்டினர்.
இவை தவிர இந்தியாவில் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் கோயில் கோபுரங்கள் பிரமிடுகள் பாணியிலேயே கட்டப்பட்டுள்ளன.

"பிரமிடின் ஆற்றல்"

அடிப்பாகம் சதுரமாகவும், அதன் நான்கு பக்கங்களை, நான்கு சமமான, இருசமபக்க முக்கோணங்களின் அடிப்பக்கமாகவும் கொண்டு வடிவமைக்கப்பட்டு ஒரு கன வடிவமே-கூம்பு கோபுரமே, பிரமிடாகும். நான்கு முகோணங்களின் உச்சிப்புள்ளிகள் ஒன்று சேரும் புள்ளி பிரமிடின் உச்சிப்புள்ளியாகும்.
இவ்வாறாக வடிவமைக்கப்பட்ட வடிவ கணித கனவடிவமான பிரமிட், பிரபஞ்ச சக்தியை ஒன்றுதிரட்டி சேமிக்கும் தன்மையுடையது என்ற உண்மையை, பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னரே, அக்கால எகிப்திய அறிஞர்கள் அறிந்திருந்தனர். எனவே பிரமிடை வடிவமைத்து, பயன்படுத்தினர். அண்டத்தில் உள்ள சக்தியை ஈர்த்து தன்னுள் தக்க வைக்கும் ஒன்றுதான் பிரமிடாகும். பிரபஞ்ச சக்தியின் வீச்சும், புவி ஈர்ப்பு விசையும் சேர்ந்த கலவையால் பெறப்படும் ஆற்றல் தான் பிரமிடின் ஆற்றலாகும்.
விழிப்புணர்விடன் நிகழும் அகவுடல் பயணத்தில் பெறப்படும் அறிவின் துணைகொண்டு அக்கால அறிஞர்கள் "கீஜாவில்" பெரிய பிரமிடை கட்டினார்கள். இது நம்மை மிக உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் சாதனமாக அமைக்கப்பட்ட கருவியாகும்.

பிரமிட் தியானம்
பிரமிடின் கீழ் அல்லது பிரமிடுக்குள் அமர்ந்து செய்யும் தியானம் 'பிரமிட் தியான'மாகும். பிரமிடினுள் அமர்ந்து செய்யும் தியானத்தில் சாந்தமான மனநிலையிலிருந்து, மிக உன்னதமான நன்னிலை உணர்வைப் பெறும் அனுபவத் திறனையும் பலர் பெற்றுள்ளனர்.
பிரமிடினுள் அமர்ந்து தியானம் செய்யும் பொழுது, பிரமிட் இல்லாமல் செய்யும் தியானத்தில் பெறும் ஆற்றலைவிட மும்மடங்கு ஆற்றலைப் பெறுகின்றோம்.
பிரமிட் தியானத்தில் தேவையற்ற உணர்ச்சிகளும் எண்ணங்களும் நீங்கி, உடல் முழுவதும் ஒரு ஒய்வு நிலையை அடைந்து, மனம் ஒருநிலைப்பட்டு உள்நோக்கி பயணம் செய்யும் உன்னதமான உணர்வு நிலையைத் தருவதாகப் பலர் கூறுகின்றனர்.
தியானத்தின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மிக அதிகமன ஆற்றலுள்ள சூழ்நிலையை பிரமிட் உருவாக்குகின்றது. மன அழுத்தம், மனச்சோர்வு இவற்றை நீக்க, பிரமிட் உதவுகின்றது.
பிரமிடினுள் செய்யப்பட்ட பல சோதனைகளிலிருந்து
கீழ்கண்ட உண்மைகள் தெரியவருகின்றன.

பதப்படுத்தி காத்தல்
சாதரணமாக கெட்டுப்போகும் பழம், பால் போன்றவை பிரமிடின் உள்ளே கெட்டுப்போகாமல் இருக்கின்றன். காபி, ஒயின், பழச்சாறு போன்றவற்றின் ருசி அதிகமாகின்றது. பிளேடு, கத்தி போன்றவற்றின் கூர்மை மழுங்காமல் இருக்கின்றன. துர்நாற்றத்தை நீக்கி, அறையின் தூய்மையைக் காக்கின்றது பிரமிட்.

சிகிச்சை அளித்தல்
காயங்கள், கட்டிகள், சிராய்ப்புகள் முதலியான விரைவில் குணமடைகின்றன. உடல் பருமனைக் குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது. ஆஸ்துமா, பல்வலி, தலைவலி, சளித்தொந்திரவு, இரத்த அழுத்தம், மூட்டுவலி, இதயத்துடிப்பு, தூக்கமின்மை போன்றவற்றை குணப்படுத்துகின்றது. கண் சம்பந்தப்பட்ட நோய். ஜீரணக்கோளாறு, தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் இவைகளை குணப்படுத்தி இளமையை அளிக்கின்றது. பிரமிட் சக்தி!

அகவுடல் பயண அனுபவங்கள்
பிரமிடினுள் தியானம் செய்யும் பொழுது அகவுடல் (சூட்சும சரீரம்) பிரயாணம் மிக எளிதாக நிகழ்கின்றது. பிரமிட் தியானத்தினால் கனவுகள் மிகத் தெளிவாக நினைவில் இருப்பதால் அன்றாட வாழ்வின் அர்த்ததத்தை நன்கு புரிந்துகொள்ள இவை உதவுகின்றன.

பிரமிட் செய்யும் முறை
எந்தப் பொருளைக்கொண்டும் பிரமிட் செய்யலாம். ஒரு பிரமிடின் உயரம் 1 அடி எனில் அதன் அடிப்பக்கத்தின் நீளம் 1.5708 அடியாகவும், முக்கோணத்தின் இருசம பக்கத்தின் நீளம் 1.4945 அடி நீளமாகவும் இருக்கவேண்டும். இங்கு உயரம் என்பது பிரமிடின் உச்சிப்புள்ளியிலிருந்து அடிப்பாகம் வரை உள்ள உயரமாகும்.
ஒவ்வொரு முக்கோணத்தின் இருசம பக்கங்களின் ஒரு பக்கம் அடிப் பக்கத்துடன் உண்டாக்கும் கோணம் 51டிகிரி, 52 நிமிடமாகும். இப்பிரமிட் பெரிய எகிப்திய "கீஜா" பிரமிடின் சிறிய வடிவமாகும். பிரமிடை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்குத் திசைகளோடு இணைந்திருக்குமாறு, பொருந்துமாறு, நிலை நிறுத்த வேண்டும்.

பிரமிடின் அளவுகள் (அடியில்)
அடிப்பக்கம் உயரம் முக்கோணத்தின் பக்கம்
    4                 2.548                    3.806
    6                 3.822                    5.709
   10                6.370                    9.516
   15                9.555                    14.24
   20               12.740                   19.032